Search This Blog

Friday 9 December 2022

வட்டார கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் பொறுப்புகள் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

மாண்டஸ் புயல் கனமழைக் காரணமாக நாளை (10.12.2022) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

 




👉 கடலூர்  (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


👉 செங்கல்பட்டு  (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


👉 விழுப்புரம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


👉 ராணிப்பேட்டை  (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


👉 காஞ்சிபுரம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


👉 செங்கல்பட்டு (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


👉 வேலூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


👉 சென்னை (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


👉 புதுச்சேரி/காரைக்கால் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)


👉 திருவண்ணாமலை (பள்ளி மற்றும் கல்லூரிகள்)


👉 சேலம் 


👉 கிருஷ்ணகிரி 


👉 நீலகிரி 


ஆகிய மாவட்டங்களுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது 

மேலும் விடுமுறை விடப்படும் மாவட்டங்கள் அதிகரிக்கலாம் தொடர்ந்து இதே link மூலம் புதிதாக விடுமுறை விடப்படும் மாவட்டங்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம் 

Wednesday 7 December 2022

"கலைத் திருவிழா போட்டிகள்" மாநில அளவிலான போட்டி தேதிகள் திடீர் மாற்றம்


6 முதல் 12 வகுப்புகளில் பயிலும்  மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் நடத்திட அறிவுறுத்தப்பட்டு 05.12.2022 வரை அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் வட்டார அளவில் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.


இதனை தொடர்ந்து பல மாவட்டங்களில் மாவட்ட அளவிலான போட்டிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.


11.11.2022 நாளிட்ட செயல்முறைகளின்படி மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் 03.01.2023 முதல் 09.01.2023க்குள் நடத்தி முடிக்க தெரிவிக்கப்பட்டது 


தற்போது நிர்வாக காரணங்களுக்காக மாநில அளவிலான போட்டிகள் 27.12.2022 முதல் 30.12.2022க்குள் நடத்தப்பட உள்ளது 


மாநில அளவிலான போட்டிகள் நடைபெறும் இடங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என மாநில திட்ட இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை  அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்












Tuesday 6 December 2022

எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான பயிற்சி கருத்தாளர்கள் மாநில அளவிலான பெயர் பட்டியல்

 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுந்தவர்களோ, தகுதியானவர்களோ அல்ல ஐகோர்ட் நீதிபதி கருத்து முழு விவரம்

 

தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுந்தவர்களோ, தகுதியானவர்களோ அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. 


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளியில், இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்த நித்யா என்பவர் ஆங்கில பாடப்பிரிவிற்கான பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 


இந்த வழக்கு விசாரணை நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் முன்பு நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழ் பாடப்பிரிவில் பி.எட் பாடப்பிரிவை முடித்த பிறகு, பி.ஏ. ஆங்கிலம் படித்ததாலும், தொலைதூர கல்வி முறையின் கீழ் படித்ததாலும் மனுதாரர் பதவி உயர்வுக்கு தகுதி பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.


இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தமிழ் பாடத்திற்கான இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு மனுதாரரை பரிசீலிக்கலாம் என உத்தரவிட்டார். 


மேலும் கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பல வழக்குகளில் தீர்பளித்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுந்தவர்களோ, தகுதியானவர்களோ அல்ல என்றும் தெரிவித்தார். 


இடஒதுக்கீட்டின் கீழ் நியமனம் மேற்கொள்வதாக இருந்தாலும் கூட தகுதியானவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என வலியுறுத்திய நீதிபதி, தற்போது ஆசிரியர்களாக உள்ள பெரும்பாலானோர் கல்லூரிக்கு சென்று படித்தவர்கள் இல்லை என்பது வேதனைக்குரியது என்று கூறினார்.


அகில இந்திய அளவில் கல்வியின் தரத்தில் தமிழகம் 27வது இடத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ள நீதிபதி, கல்விக்கு 36,895 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்  நிலையில், பெருந்தொகை ஆசிரியர்களின் ஊதியத்திற்கே செலவிடப்படுகிறது என்று குறிப்பிட்டார். 


நீதிமன்றத்தின் அழைப்பை ஏற்று நேரில் ஆஜரான தமிழக தொடக்க கல்வி இயக்குநர் தாக்கல் செய்த அறிக்கையில், கல்வி நிறுவனங்களில் நேரில் சென்று படித்தவர்களே ஆசிரியர்களாக நியமிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதையடுத்து, கல்லூரியில் படித்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் நடைமுறையை 3 மாதங்களில் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்

எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான பயிற்சி கருத்தாளர்களை விடுவிக்க உத்தரவு


எண்ணும் எழுத்தும் 

மாநில அளவிலான 

பயிற்சி


15..12.22

16.12.22

17.12.22


மாவட்ட அளவிலான 

பயிற்சி


19.12.22

20.12.22

21.12.22


ஒன்றிய அளவிலான 

பயிற்சி


02.01.23

03.01.23

04.01.23 




Sunday 4 December 2022

பள்ளிக் கல்வித்துறை - கலைத் திருவிழா (Kalai Thiruvizha) 2022 - 2023 - வட்டார அளவிலான, மாவட்ட அளவிலான பாராட்டு சான்றிதழ் மாதிரி

 

மாவட்ட அளவிலான சான்றிதழ்






வட்டார அளவு சான்றிதழ்



10 ஆம் வகுப்பு தமிழ் சரியான விடையை தேர்வு செய்தல் மாதிரி வினாத்தாள்


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

10 ஆம் வகுப்பு தமிழ் கடிதங்கள் PDF 13 மாதிரி கடிதங்கள் தயாரிப்பு அரசு உயர்நிலைப்பள்ளி தணிகைபோளூர்


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

பள்ளிக் கலைத்திருவிழா திருவட்டார் ஒன்றியம், கன்னியாகுமரி ஜண்டா மேளம்

 

👇👇

வீடியோ பார்க்க இதை அழுத்தவும்



நன்றி 

முத்தமிழ் ICT பாஸிஜி 


குறிப்பு 

உங்கள் பள்ளி மாணவர்களின் நிகழ்வை வலைத்தளத்தில் வெளியிட 

9952329008 நம்பருக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள் தெளிவான முகவரியுடன் 

பள்ளிக் கலைத்திருவிழா நாசிக் டோல் மேல்புறம் ஒன்றியம் கன்னியாகுமரி

 


👇👇

வீடியோ பார்க்க இதை அழுத்தவும்



நன்றி 
முத்தமிழ் ICT பாஸிஜி 



குறிப்பு 

உங்கள் பள்ளி மாணவர்களின் நிகழ்வை வலைத்தளத்தில் வெளியிட 

9952329008 நம்பருக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள் தெளிவான முகவரியுடன் 

பள்ளிக் கலைத்திருவிழா அ.ந.நி பள்ளி சுசீந்திரம், அகஸ்தீஸ்வரம் ஒன்றியம், கன்னியாகுமரி


👇👇

CLICK HERE TO WATCH


THANKS TO

முத்தமிழ் ICT பாஸிஜி 



குறிப்பு 

உங்கள் பள்ளி மாணவர்களின் நிகழ்வை வலைத்தளத்தில் வெளியிட 

9952329008 நம்பருக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்  தெளிவான முகவரியுடன்