Search This Blog

Thursday 23 November 2023

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் குறித்தான முழுமையான தகவல்





தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த வாரங்களில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அதிக அளவிலான கனமழை பெய்தது.


கடலூர் மாவட்டத்தில் பல நாட்கள் விடிய விடிய கனமழை பெய்து பொதுமக்கள், மாணவர்கள் அன்றாட பணிகளை செய்வதில் மிகப்பெரும் தடங்கல் நிலவியது.


இந்நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் இரண்டு பகுதிகளும் அதிகமான மழை பொலிவை சந்தித்து வருகிறது 


தென்மாவட்டங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது 


22.11.2023 நேற்று இரவு முதல் தென் மாவட்டங்களில் மழை இரவு முழுவதும் பெய்து காலையிலும் மழை தொடர்கிறது 


இதன் காரணமாகவும், கனமழை எச்சரிக்கை இருப்பதாலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது 


தென்காசி மாவட்டம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது   

உயர்கல்வி வகுப்புகளுக்கு இன்று நடைபெறவிருந்த பருவத்தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும். அதற்கான தேதி முதன்மை கல்வி அலுவலரால் பின்னர் அறிவிக்கப்படும். - மாவட்ட ஆட்சியர், தென்காசி


நெல்லை மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது 


கன்னியாகுமரி மாவட்டப்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று நடைபெறுவதாக இருந்த CLAT தேர்வுக்கான பயிற்சியானது மழையின் காரணமாக வழங்கப்பட்டுள்ள விடுமுறையால் நாளைய தினத்திற்கு (24.11.23) ஒத்திவைக்கப்படுகிறது. இன்று நடைபெறுவதாக இருந்த அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெறாது .இன்றைய போட்டிகள் அனைத்தும் நாளைய தினம்  நடைபெறும் போட்டிகளோடு (24.11.2023 அன்று) நடைபெறும் எனவும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அறிவித்துள்ளார் 


தூத்துக்குடி மாவட்டப்பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது 


புதுக்கோட்டை மாவட்டப்பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது 


கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது 


கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது 


நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது 


கோவை காரைமடை ஒன்றிய பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது 




கீழே உள்ள மாவட்டங்களில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர் 

சென்னை, 

திருவள்ளூர், 

காஞ்சிபுரம் 



JOIN OUR WHAT APP GROUP

👇👇

CLICK HERE TO JOIN


JOIN OUR TELEGRAM GROUP
TAMILNADU TEACHERS

👇👇

No comments:

Post a Comment