Search This Blog

Monday 23 January 2023

DEO - முதல் நிலை தேர்வு - குழு பயிற்சி பெற அழைப்பு

நண்பர்களுக்கு வணக்கம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு அறிவிப்பாணையை வெளியிட்டு இருந்தது. 


கடந்த 13ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். 


இப்போட்டித் தேர்விற்கு தன்னார்வமாக நம்பிக்கையுடன் விண்ணப்பித்துள்ள  அனைத்து வகை  ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள்.


விண்ணப்பித்தோரின் அடுத்த இலக்கு தேர்வை மகிழ்வாக எதிர்கொள்வது. மற்றும் வெற்றிபெறுவது. அதற்கு அவசியம் அனைவரும் தங்களை தயார் செய்துகொள்ள வேண்டும்.


நமது வேலையுடன் இதை எதிர்கொள்வது சற்று கடினம் ஆகினும் கூடுதல் முயற்சி எடுப்போர் வெற்றிபெறுவர்..


இன்றைய விண்ணப்பதாரர்கள் தான் நாளைய நம் பகுதி (or) அருகாமை மாவட்ட கல்வி அலுவலராக வருவர். அதற்காக வெற்றிபெற வேண்டி மீண்டும் வாழ்த்துகிறோம்.


ஒரு சிறிய முயற்சியாக தென்காசி ஐ.சி.ஐ. அரசு மாதிரி மேல்நிலைபள்ளியில் உரிய அனுமதி பெற்று விண்ணப்பித்தோர்களுக்காக மாலை 5.30 - 7.30  மற்றும் வார இறுதிநாட்களில் ஒன்றுகூடி பாடப்பொருள் குறித்து கலந்தாய்வு செய்து தகுதி வாய்ந்த ஆசிரியர்களை அழைத்து வகுப்பு எடுக்கவும்


மாதிரி தேர்வு எழுதி நமக்குள் தயார் செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.


விண்ணப்பித்தோர் தங்கள் ஆலோசனைகளை கூறவும். மாதிரி தேர்விற்கும், தொடர் வகுப்பிற்கும் திட்டம் உள்ளது. 


குழு கற்றல் வெற்றியின் அடிப்படை. 


கலந்துகொள்ள ஆர்வம் உடைய விண்ணப்பித்த ஆசிரியர்கள் தங்கள் ஆலோசனை மற்றும் இசைவினை தெரிவிக்கவும்.


குறைந்த காலமே உள்ளது


இந்த வாரமே பயிற்சியை துவங்குவோம்.


அனைவரும் வந்து செல்லவும், மேலும் நம்மை ஊக்கப்படுத்தவும் தென்காசி ஐ.சி.ஐ பள்ளி தயாராக உள்ளது.


பங்குபெறுவோம் வெற்றிபெறுவோம்


வாருங்கள் வரவேற்கிறோம்


நன்றி

மு. சுரேஷ்குமார்

பட்டதாரி ஆசிரியர்

இராமசுவாமி பிள்ளை மேல் நிலைப்பள்ளி

இலஞ்சி

Whats app. 9486585490


பயிற்சிஒருங்கிணைப்பு

முத்துக்குமார்

பட்டதாரி ஆசிரியர்

ஐ சி ஐ அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, 

தென்காசி  

whats app 98420 29870.

No comments:

Post a Comment