Search This Blog

Saturday, 23 May 2026

பள்ளிக் கல்வித் துறையைச் சார்ந்த அலுவலர்கள்/பணியாளர்கள் காலை 10:00 மணிக்கு முன்பாக அலுவலகம் வர வேண்டும் என உத்தரவு


 

பள்ளிக்கல்வித்துறை சார்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் சுருக்கம் 




சுற்றறிக்கை எண் 

01/OP1/2026


பொருள் 

பள்ளிக்கல்வித்துறை ஊழியர்கள் அலுவலகத்திற்கு உரிய நேரத்திற்கு வருவது குறித்த அறிவுறுத்தல்கள் 


வருகை நேரம் 

செயலக அலுவலக கையேடு எண் 510-ன் படி அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் காலை 10 மணிக்குள் அலுவலகத்திற்கு வர வேண்டும் 




உதவியாளர்கள் மற்றும் பதிவு எழுத்தர்கள் 

காலை 9 மணிக்குள் அலுவலகத்தில் இருக்க வேண்டும் 



அனுமதி மற்றும் விடுப்பு முறைகள் 

அலுவலகத்தை விட்டு வெளியேறும் முன் இரண்டாம் நிலை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் 



தற்செயல் விடுப்பு அல்லது ஈட்டிய விடுப்பு போன்ற எந்தவொரு விடுப்பையும் எடுப்பதற்கு முன் உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் மற்றும் விடுப்பு பதிவேடுகளை சரியாக பராமரிக்க வேண்டும் 



எச்சரிக்கை 

இந்த அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் 



சுற்றறிக்கை எண் 

02/OP1/2026


பொருள் 

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு உரிய நேரத்திற்கு வருவது குறித்த அறிவுறுத்தல்கள் 



அதிகாரிகளுக்கான உத்தரவு 

அரசின் சார்பு செயலாளர்கள், துணை செயலாளர்கள், மற்றும் கூடுதல் செயலாளர்கள் அனைவரும் காலை 10 மணிக்குள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என உத்தரவிடப்படுகிறது 



எச்சரிக்கை 

மேற்கண்ட அறிவுறுத்தல்கள் எவ்வித வீழ்ச்சியுமின்றி கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் 


முக்கிய விவரங்கள் 


ஆணை வெளியிடப்பட்ட தேதி 

22.05.2026



இடம் 

பள்ளிக்கல்வித்துறை 

சென்னை 9



ஆணை வெளியிட்டவர் 

ஆர். ராமச்சந்திரன் 

அரசின் சார்பு செயலாளர் 



மேலும் விவரம் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் அரசு ஆணை பதிவிறக்கம் செய்யவும் 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment