Search This Blog

Saturday 17 December 2022

40000 மதிப்பிலான பள்ளி பெயர் தாங்கிய நுழைவு பலகையை அன்பளிப்பாக வழங்கிய ஆங்கில ஆசிரியர்


தென்காசி மாவட்டம் தென்காசி ஒன்றியத்தில் உள்ள கரிசல்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் திரு.ரமேஷ் அவர்கள்.

பள்ளியில் நெடுநாட்களாக பள்ளியின் பெயர் பலகை நுழைவு வாயிலில் இல்லாததை மனதில் கொண்டு தானாகவே முன்வந்து சுமார் 40000 ரூபாய் மதிப்பிலான பள்ளியின் பெயர் தாங்கிய இரண்டு போர்டுகளை அன்பளிப்பாக வழங்கினார்.

மேலும் திரு.ரமேஷ் அவர்கள் தொடர்ந்து ஆங்கில பாடத்தில் சிறந்த முறையில் உச்சரிப்பு உடைய  மாணவ மாணவியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி வருகிறார் 

பள்ளியின் JRC சங்கம் ஒருங்கிணைப்பாளராக இருந்து மாணவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்து வருகிறார்.

திரு.ரமேஷ் அவர்களின் சிறந்த பணியினை தலைமை ஆசிரியர், உடன் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊர் சமுதாய பெரியோர்கள், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் உறுப்பினர்கள் அனைவரும் பாராட்டினார்கள் 


                                       


 
                                       









No comments:

Post a Comment