Search This Blog

Saturday 2 March 2024

தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு - அரசாணை எண் 243 ஐ பின்பற்றி மாநில அளவில் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு


2024 ஆம் ஆண்டு 01.01.2024 நிலவரப்படி மாநில அளவில் தகுதி வாய்ந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் விவரங்களை அனுப்ப தொடக்கக்கல்வி இணை இயக்குனர் உத்தரவு அனுப்பியுள்ளார் 





தகுதி வாய்ந்த தேர்வுகளில் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2023-க்கு முன்னர் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்து இருக்க வேண்டும்.





ஊராட்சி ஒன்றிய/நகராட்சி/மாநகராட்சி/அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவரின் விவரங்களை அனுப்பவேண்டும் 





பட்டதாரி ஆசிரியராக (ஆங்கிலம், கணிதம், அறிவியல்) பதவி உயர்வு பெறுவதற்கு முழுத்தகுதி பெற்ற தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவராக இருக்க வேண்டும் 





15.03.2024-க்குள் தொடக்கக்கல்வி இயக்ககம் வந்து சேரும் வண்ணம் விவரங்களை அனுப்ப இணை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் 






இணை இயக்குனரின் ஆணை மற்றும் அது தொடர்பான FORMATE பெற கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்










No comments:

Post a Comment