Search This Blog

Thursday 28 April 2022

TNPSC கவிஞர்கள், எழுத்தாளர்கள், தலைவர்கள் சிறப்பு பெயர்கள்

 

TNPSC ️சிறப்பு பெயர்கள்

1.தெய்வப்புலவர் செந்நாப் போதார், பொய்யில் புலவர், நான்முகனார், நாயனார், தேவர், முதற்பாவலர், மாதானுபங்கி, பெருநாவலர் - திருவள்ளுவர்


2. தம்பிரான் தோழர், வன்தொண்டன் - சுந்தரர்


3. தமிழ் மூதாட்டி, அருந்தமிழ்ச் செல்வி - ஒளவையார்


4. புலனழுக்கற்ற அந்தணன், விவிரித்த கேள்வி விளங்கு புகழ்புலவர், குறிஞ்சிக்கவி - கபிலர்


5. மாத முனிவன், மாமுன், தமிழ்முனி, குறுமுனி, திருமுனி, முதல் சித்தர் - அகத்தியர்


6. வரலாற்றுப் புலவர் - பரணர்


7. இலக்கியச் சிங்கம் - நக்கீரன்


8. அரசத் துறவி - இளங்கோவடிகள்


9. அம்மை - காரைக்காலம்மையார்


10. காப்பியனார் - தொல்காப்பியனார்


11. சாத்தன் - சீத்தலைச் சாத்தனார்


12. இன்தமிழ் ஏசுநாதர், சம்மந்தர் - திருஞானசம்பந்தர்


13. கவிமணி - தேசிய விநாயகம் பிள்ளை


14. அப்பர் - திருநாவுக்கரசர்


15. தென்னவன் பிரம்மராயன், திருவாதவூரார், வாதவூரடிகள், ஆளுடைய பிள்ளை - மாணிக்கவாசகர்


16. தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி, புதுக்கவிதையின் தந்தை, விடுதலைக்கவி, உணர்ச்சிக்கவி, தேசியக் கவி, பாட்டுக்கொரு புலவன், சிந்துக்குத் தந்தை, புதுமைக்கவி, மகாகவி, நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலை - பாரதியார்


17. கவிச்சக்கரவர்த்தி, விருத்தக்கவி - கம்பர் (கம்பரைப் புகழ்நதவர் சடையப்ப வள்ளல்)


18. சூடிக்கொடுத்த சுடர்கொடி, பாவை நாச்சியார் - ஆண்டாள்


19. தமிழ்வியாசர் - நம்பியாண்டார் நம்பி


20. அருண்மொழித் தேவர் - சேக்கிழார்


21. பட்டர்பிரான் - பெரியாழ்வார்


22. வெண்பாப்புலவர் - புகழேந்தி


23. தமிழ்த் தென்றல் - திரு.வி.கல்யாண சுந்தரனார்


24. உவமைக்கவிஞர் - சுரதா


25. புரட்சிக் கவிஞர், புரட்சிக்கவி, பாவேந்தர், புதுமைக்கவிஞர், இயற்கை கவிஞர், பூங்காட்டுத் தம்பி, கனகசுப்புரத்தினம், தமிழ் நாட்டின் ரசூல் கம்சத் தேவ் - பாரதிதாசன்


26. நாமக்கல் கவிஞர், காந்தியக் கவிஞர் - வெ.இராமலிங்கம் பிள்ளை


27. பரணிப்புலவர் - ஜெயங்கொண்டார்


28. ஆசுகவி - காளமேகப்புலவர்


29. சந்தக்கவி - அருணகிரிநாதர்


30. சன்மார்க்க கவி, வள்ளலார் - இராமலிங்க அடிகளார்


31. திருமங்கை மன்னன் - திமங்கையாழ்வார்


32. கவியரசு - கண்ணதாசன்


33. மகாவித்துவான் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை


34. சிறுகதை மன்னன்- ஜெயகாநாதன், புதுமைப்பித்தன்


35. சுஜாதா - இரங்கராஜன்


36. தமிழ் அண்ணல் - டாக்டர் இராமபெரியகருப்பன்


37. கிறிஸ்துவக் கம்பன் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை. இவர் இரட்சண்ய யாத்திரிகம் எனும் நூலின் ஆசிரியர். இந்நூல் பில்க்ரிம்ஸ் பிரோகிரஸ் எனும் ஆங்கில நூலின் தழுவலாகும்)


38. பதிப்புச் செம்மல் - ஆறுமுக நாவலர்


39. சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுப்பிள்ளை


40. மொழி ஞாயிறு - தெய்வநேயப் பாவாணர்


41. தத்துவக் கவிஞர் - திருமூலர்


42. கர்ம வீரர், கறுப்பு காந்தி, கல்வி கண் திறந்தவர், கிங் மேக்கர், படிக்காத மேதை - காமராசர்


43. அண்ணல், மகாத்மா, தேசப்பிதா - காந்தியடிகள்


44. தமிழர் தந்தை - சி.பா. ஆதித்தனார்


45. தமிழ்நாட்டின் வால்டர்ஸ்காட், தமிழ் வரலாற்று நாவலின் தந்தை - கல்கி


46. தனித்தமிழ் இசைக்காவலர் - இராஜா அண்ணாமலைச் செட்டியார்


47. சந்தக்கவி - அருணகிரிநாதர்


48 - ரசிகமணி - டி.கே.சி


49. தனித்தமிழ் இயக்கத் தந்தை - மறைமலையடிகள்


50. தமிழ்த் தாத்தா- உ.வே.சாமிநாத ஐயர் -இயர் பெயர் வேங்கடரத்தினம். இவருக்கு சாமிநாதன் என்ற பெயரை வைத்தவர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை. இவரே உ.வே.சு.வின் ஆசிரியர். இவர் வாழ்க்கை வரலாறின் பெயர் என் சரிதம்


51. இராஜாஜி, மூதறிஞர் -  இராஜகோபாலாச்சாரி


52. கவிக்குயில் - சரோஜினி நாயுடு


53. சிற்பி - பாலசுப்பிரமணியன்


54. உவமைக்கவிஞர், சுரதா - சுப்புரத்தினதாசன். இயர்பெயர் இராசகோபாலன், பாரதிதாசன் மீது கொண்ட பற்று காரணமாகவே இவர் தம் பெயரை சுப்புரத்தின தாசன் என மாற்றிக்கொணாடார்.


55. தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த், தமிழ்நாட்டின் தாகூர், ரமி, கவிஞரேறு, பாவலர் மணி - வாணிதாசன்


56. கவியரசு - வைரமுத்து


57. நடமாடும் பல்கலைக்கழகம் - நெடுஞ்செழியன்


58. திராவிட சாஸ்திரி - சூரிய நாராயண சாஸ்திரிகள்


59. அழகிய மணவாளதாசர், திவ்வியகவி - பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்


60. கவிராட்சசன் - ஓட்டக்கூத்தர்


61. உரையாசிரியர் - இளம்பூரணர்


62. பெருங்கவிக்கோ - பா.மு. சேதுராமன்


63. மீரா - மீ. ராஜேந்திரன்


64. தமிழ்மாணவர் - போப்பையர்


65. வீரமாமுனிவர் - கொன்ஸ்டான் ஜோசப் பெஸ்கி


66. அறிஞர், பேரறிஞர், தென்னாட்டு பெர்னாட்ஷா - அண்ணாதுரை


67. புரட்சித் தலைவர் - எம்.ஜி.ராமச்சந்திரன்


68. கலைஞர் - மு.கருணாநிதி


69. வைக்கம் வீரர், பகுத்தறிவுப் பகலவன், தந்தை பெரியார், சுயமரியாதைச் சுடர், தெற்காசிய சாக்ரடீஸ், வெண்தாடி வேந்தர், சுயமரியாதைச் சுடர் - ஈ.வெ.இராமசாமி


70. இந்தியாவின் நைட்டிங்கேல் - சரோஜினி நாயுடு


71. இந்தியாவின் எடிசன் - ஜி.டி.நாயுடு (கோபால்சாமி துரைசாமி நாயுடு)


72. இந்தியாவின் முதிரிந்த மனிதர் - தாதாபாய் நவ்ரோஜி


73. இந்தியாவின் இரும்பு மனிதர், இந்தியாவின் பிஸ்மார்க் - வல்லபாய் படேல்

74. இந்தியா

வின் விடிவெள்ளி - ராஜா ராம் மோகன் ராய்


75. ஆசிய ஜோதி, இந்தியாவின் ஆபரணம் - நேரு


76. இந்தியாவின் கிளி - அமிர்குஸ்ரு


77. இந்தியாவின் தேச பந்து - சி.ஆர்.தாஸ்


78. இந்தியாவின் பங்க பந்து - முஜிபூர் ரஹமான்


79. இந்திய வானசாஸ்த்திரத்தின் தந்தை - ஆரியப்பட்டர்


80. பஞ்சாப் சிங்கம் - வாலா லஜபதிராய்


81. மராத்திய சிங்கம் - சிவாஜி


82. லோகமான்யர் - பாலகங்காதர திலகர்


83. பீமாராவ் ராம்ஜி - அம்பேத்கர்


84. இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் - தயானந்த சரஸ்வதி


85. தமிழ்நாட்டின் மாப்பசான் - ஜெயகாந்தன்


86. பாவலர் ஏறு - பெருஞ்சித்தரனார்


87. இந்தியாவின் ஷேக்ஸ்பியர் - காளிதாசர்


89. தென்னாட்டு தாகூர் - அ.கி.வேங்கடரமணி


90. தென்னாட்டின் ஜான்சிராணி - கடலூர் அஞ்சலையம்மாள்


91. கவிக்கோ - அப்துல் ரஹமான்


92. தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா, உலகம் சுற்றிய முதல் தமிழ் அறிஞர் - மு.வரதராசன்

93. தற்கால உரைநடையின்
தந்தை - ஆறுமுக நாவலர்


94. தனித்தமிழ் இலக்கியத்தின் தந்தை - மறைமலை அடிகள்


95. தமிழ்நாட்டின் ஜென் ஆஸ்டின் - அநுத்தமா


96. தமிழ்நாட்டின் ஜேம்ஸ் ஹாட்லி - சுஜதா . இவரது இயர்பெயர் எஸ்.ரங்கராஜன்.


97. தமிழகத்தின் அன்னிபெசண்ட்  - மூவலூர் இராமாமிர்தம் அம்மையார். அவ்வாறு அழைத்தவர் காந்தியடிகள்.


98. தென்னாட்டு போஸ் - முத்துராமலிங்க தேவர்


99. தென்னாட்டு திலகர், செக்கிழுத்த  செம்மல், கப்பல் ஓட்டிய தமிழன், வ.உ.சி - வ.உ.சிதம்பரனார்.



100. பகுத்தறிவுக் கவிராயர் - உடுமலை நாரயணகவி


101. சிலம்புச் செல்வர் - மா.பெ.சிவஞானம்


102. அரசியலின் சொல்லின் செல்வர் -ஈ.வே.கி.சம்பத்


103. இலக்கியத்தின் சொல்லின் செல்வர் - இரா.பி.சேதுப்பிள்ளை


104. சொல்லின் செல்வன் - அனுமன்


105. முத்தமிழ் காவலர் - கி.ஆ.பெ. விஸ்வநாதம்


106. தமிழ் தென்றல் - திரு.வி.கல்யாண சுந்தரனார் (திருவாரூர் விருத்தாச்சலம் கல்யாண சுந்தரனார்)


107. குழந்தைக் கவிஞர் - அழ.வள்ளியப்பா


108. இயற்கைக் கவிஞர் - வில்லியம் வொர்ட்ஸ்வொர்த்


109. மக்கள் கவிஞர் - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்


110. கரந்தைக் கவிஞர் - வேங்கடாஜலம் பிள்ளை


111. நாமக்கல் கவிஞர், காந்தியக்கவிஞர், ஆஸ்தான கவிஞர், ஆட்சி மொழிக்காவலர், முதல் அரசவைக் கவிஞர் - வெ.ராமலிங்கம்பிள்ளை


112. திருவருட்பிரகாச வள்ளலார் - இராமலிங்க அடிகளார்


113. திவ்ய கவி, தெய்வகவி, அழகிய மாணவாளதாசர் - பிள்ளைபெருமாள் ஐயங்கார்


114. கவியரசு - முடியரசன் - இயற்பெயர் துரைராசு


115. நாடகத்தந்தை - பம்மல் சம்மந்த முதலியார்


116. தமிழ்நாடக தலைமை ஆசிரியர், நாடக உலகின் இமயமலை - சங்கரதாஸ் சாமிகள்


117. தமிழ் நாடக மறுமலர்ச்சி தந்தை - கந்தசாமி


118. சிறுகதை மன்னன், புதுமைப் பித்தன் - சொ.விருத்தாசலம்


119. சிறுகதையின் முன்னோடி - வ.வே.சு.ஐயர்


120. புதுக்கவிதையின் பிதாமகன் - நா.பிச்சமூர்த்தி


121. இசைக்குயில் - எம்.எஸ்.சுப்புலட்சுமி


122. திரை இசைத் திலகம் - மருதகாசி


123. ஏழிசை மன்னர் - தியாகராஜ பாகவதர்


124. முத்தையா - கண்ணதாசன் (சேரமான் காதலி என்ற புதினத்திற்கு சாகித்ய அகடாமி பரிசு பெற்றவர்)


125. கவிராட்சன் - ஒட்டக்கூத்தர்


126. ரசிகமணி - டி.கே.சிதம்பரநாத முதலியார்


127. பண்டித மணி - மு.கதிரேச செட்டியார்


128. நவீனக் கம்பர் - மீனாட்சி சுந்தரனார்


129. அமுது அடியடந்த அன்பர், திருவாதவூரர், ஆளுடை அடிகள் - மாணிக்கவாசகர் (சைவ சமயக்குரவரர் நால்வரில் ஒருவர்)


129. திராவிட சிசு, ஆளுடைப்பிள்ளை - திருஞானசம்பந்தர்


130. அப்பர், வாசீகர், தருமசேனர், மருள்நீக்கியார், ஆளுடை அரசு - திருநாவுக்கரசர்


131. பொதிகை முனி - அகத்தியர்


132. நாவலர் - சோமசுந்தர பாரதியார்


133. கவியோகி - சுத்தானந்த பாரதியார்


134. பரிதிமாற்கலைஞர், தமிழ் நாடகப் பேராசிரியர் - சூரிய நாராயண சாஸ்திரி


135. தமிழ் மாணவர் - ஜி.யூ.போப் (ஜியார்ஜ் யூக்ளோ போப், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். நாலடியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்)


136. கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி - வீரமாமுனிவர். (இவர் இத்தாலி நாட்டில் பிறந்தவர். இவருக்கு தமிழ் கற்றுத் தந்தவர் மதுரை சுப்பிரமணியன்)


137. திராவிட ஒப்பிலக்கணத் தந்தை - கார்டுவெல்


138. இரட்டைப் புலவர்கள் - இளஞ்சூரியர், முதுசூரியர்


139. இலக்கண தாத்தா - மே.வி.வேணுகோபால்


140. மைசூர் புலி - திப்புசுல்தான்


141. மாதர்குல மாணிக்கம் - முத்துலட்சுமி ரெட்டி (அவ்வை இல்லத்தை உருவாக்கியவர்)


142. வைணவம் தந்த செல்வி, சூடிக்கொடுத்த சுடர்கொடி - ஆண்டாள்


143. சுல்தான் அப்துல் காதர் - குணங்குடி மஸ்தான்


144. மே தினம் கண்டவர் - சிங்கார வேலனார்


145. காந்தியடியின் தத்தெடுக்கப்பட்ட மகள் எனப் பெயர் பெற்றவர் - அம்புஜத்தமாள்

No comments:

Post a Comment