Search This Blog

Friday 22 April 2022

TNPSC பொது அறிவு தேர்வு - 2 (வினா மற்றும் விடை)

1. தமிழ்நாட்டின் தென்கோடி; குமரி முனை; வடகோடி முனை; ___? 


2. வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு? 


3. லோகமான்யர் என்று அழைக்கப்படுபவர்? 


4. சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி (1877) ___? 


5. இஸ்லாமிய கம்பர்;உமறுப் புலவர் கிருத்துவ கம்பர் ; __? 


6. __ விதியானது ஓர் ஒளிக்கதிர் சிதறல் அடையும் அளவானது அதன் அலை நீளத்தின் நான்மடிக்கு எதிர்தகவில் இருக்கும். 


7. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் கல்வியறிவு விகிதம்___? 


8. சரிவிகித உணவு, குடிநீர், சுற்றுச்சூழல் சுகாதாரம், ஆரம்பக் கல்வி ஆகியவற்றிற்கான உடல் மற்றும் பொருளாதார மற்றும் சமூக அணுகல் என்பது ஊட்டச்சத்து ஆகும் என்ற கருத்தை கூறியவர்? 


9. வேலூர் புரட்சி வெடித்த நாள்? 


10. இரண்டு சொற்களுக்கு இடையில் வேற்றுமை மறைந்து வந்து பொருள் தந்தால் அதனை ___ என்பர். 


11. லாலா லஜபதி ராயின் உயிர் இழப்புக்கு காரணமான தடியடியை நடத்திய காவல் துறை அதிகாரி ___? 


12. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சோதனை உந்து விசை (கிரையோஜெனிக்) செயற்கை கோள் ஏவுதளம் அமைந்துள்ள மகேந்திரகிரி மலையின் உயரம்? 


13. பாஞ்சாலி சபத சருக்கங்கள்:5;நீலகேசி சருக்கங்கள்;___? 


14.சென்னை மவுண்ட் ரோட்டில் அமைந்திருந்த ஜேம்ஸ் நீல் சிலை யாருடைய ஆட்சி காலத்தில் அகற்றப்பட்டது. 


15. __ என்பது மற்ற நாடுகளுடன் உறவைப் பேணுவதற்காக ஒரு நாட்டில் கவனமாக வடிவமைக்கப்பட்ட உத்திகளின் கலவை ஆகும்.



விடை 

1.பழவேற்காடு ஏரி

2. 1730

3. பாலகங்காதர திலகர்

4. டி முத்துசாமி

5.ஹெச் ஏ கிருஷ்ணபிள்ளை

6. ராலே

7. 74.04

8. எம் எஸ் சுவாமி நாதன்

9. 1806 ஜுலை 10

10. வேற்றுமைத் தொகை

11. சாண்டர்ஸ்

12. 1645 மீ

13. பத்து

14. இராஜாஜி (1937) 

15. வெளியுறவுக் கொள்கை


No comments:

Post a Comment