Search This Blog

Monday 22 May 2023

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பார்வைக்காக... எண்ணும் எழுத்தும் பாடத்திட்டத்திற்கான பயிற்சியில் ஆதிவாசிகளின் தோற்றத்தில் ஆசிரியர்கள் ஆட வேண்டுமா?...*



Follow this link to join ramanibabu.blogspot.com WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN


AIFETO..22.05.2023


தமிழக ஆசிரியர் கூட்டணி

அரசு அறிந்தேற்பு எண்:36/2001


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பார்வைக்காக... எண்ணும் எழுத்தும் பாடத்திட்டத்திற்கான  பயிற்சியில் ஆதிவாசிகளின் தோற்றத்தில் ஆசிரியர்கள் ஆட வேண்டுமா?


 ஏற்கனவே ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்புகளுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சியினை நடத்தி விட்டார்கள். அச்சடித்த புத்தகத்தையே கையில் எடுக்காமல் நடத்தினார்கள். வாசிப்புத் திறனில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. வெளிப்படைத் தன்மையுடன் பேச வேண்டுமானால் இதுதான் உண்மை.


Follow this link to join ramanibabu.blogspot.com WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



 கல்வியாளர்கள் எங்களைப் போன்ற மூத்த ஆசிரியர்கள் அப்போதே கருத்து தெரிவித்திருந்தோம்!. நான்கு, ஐந்து வகுப்பு மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்ய வேண்டாம்.  அப்படி நடைமுறைப்படுத்தினால் ஆறாம் வகுப்பிற்கு செல்லும்போது மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வு செய்து நாங்கள் தெரியப்படுத்தி இருந்தோம்!.. ஆனாலும் பிடிவாதமாக நான்கு, ஐந்து வகுப்பு மாணவர்களுக்கும் எண்ணும் எழுத்தும்  பாடத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு விட்டது.


 அதற்கான பயிற்சி அனைத்து ஆசிரியர்களுக்கும் ஜூன் 1ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது.


 மாநில அளவில் நடைபெற்ற  கருத்தாளர்களுக்கான பயிற்சியில்  பெண் ஆசிரியர்களும், ஆண் ஆசிரியர்களும் இலை தழைகளை உடுத்திக் கொண்டு ஆதிவாசிகளைப் போல்.


ஜிம் ஜிம் ஜிம்ப்பா!!

ஜிம் ஜிம் ஜிம்ப்பா!!

ஜிம் ஜிம் ஜிம்ப்பா!!



Follow this link to join ramanibabu.blogspot.com WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



 என்று கத்திக் கொண்டு நடனம் ஆடுவதை பார்த்து நெஞ்சம் பதை பதைக்கிறது.


 எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்....  என்று இன்னமும் போற்றி வணங்கப்படுகிறது. ஆனால் அவர்களை  ஆதிவாசிகள் போல் நடனமாட செய்துள்ளார்கள். SCERT சார்பில் ஆட வைத்து வீடியோ எடுப்பதையும் பார்க்கிறோம்.


 நல்ல வேளை ஆதிவாசிகளுக்கு அந்த காலத்தில் உடைகள் இல்லை. இலைகள், மரப்பட்டைகள், விலங்கின் தோல் மட்டும்தான் உடுத்தி வந்தார்கள். எங்கள் ஆசிரியர்களின் மானம் காப்பாற்றப்பட்டுள்ளது என்பதை எண்ணி ஆறுதலுறுகிறோம்.


வகுப்பறையில் யாராவது ஒரு மாணவன் ஆதிவாசிகள் அந்தக் காலத்தில் இப்படித்தான்? ஆடை உடுத்தி இருந்தார்களா?.. என்று கேட்டால் என்ன பதில் சொலவது?


 ஒரு பாடத்தை நடத்தும் போது  ஆர்வமூட்டுவதற்காக  இது போன்று பல்வேறு தோற்றங்களில் ஆட வைத்துப் பார்ப்பது தான் SCERT  க்கு அழகா?


 இப்படி  பல்வேறு தோற்றங்களில் ஆசிரியர்கள் ஆடுவதால் மாணவர்களுடைய வாசிப்புத் திறன் மேம்பட்டு விடுமா?..  பாடப் பொருளின் விசாலமான பார்வையும் அவர்களுக்கு கிடைத்து விடுமா?


 அந்த  நடனத்தில் ஆடக்கூடிய ஆசிரியர் சகோதரி ஒருவர் தானாகவே எழுந்து உட்கார முடியாத நிலையில் இருக்கக்கூடியவரையும் ஆடச் செய்து பார்க்கிறார்கள்.


இனிமேல் மாவட்டங்களில் நடைபெறும் பயிற்சிக்கு  ஆசிரியர்கள் இலை தழைகளுடன் தான்  வர வேண்டுமா?...  இந்த பயிற்சியை மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கின்ற பொழுது அவர்களும் இலை, தழைகளுடன் மேக்கப் செய்து ஆசிரியரோடு சேர்ந்து ஆட வேண்டுமா?


Follow this link to join ramanibabu.blogspot.com WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



 இதுதான் நான்கு ஐந்து வகுப்புக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சியா?..  அடுத்து மலைவாசிகள் பாட அறிமுகத்திற்கு குறவன், குறத்தி போல் வேடமணிந்து டப்பா கூத்து  நடனம் ஆட வேண்டுமா?..   இதையெல்லாம் நினைத்துப்  பார்ப்பதற்கே மனம் வேதனையுறுகிறது.


ஒரு மாவட்டத்தின் ஆட்சித் தலைவர் ஆடியதைப் போல், இந்த பயிற்சியை வடிவமைத்துள்ள SCERT  பேராசிரியர்கள், DIET முதல்வர்கள், விரிவுரையாளர்கள் முன்னுதாரணமாக இது போன்ற தோற்றங்களில் முதலில் ஆடியும், நடித்தும் காட்டுவார்களா?


 ஜூன் 1ஆம் தேதி முதல் பள்ளி திறக்கப்பட இருக்கிறது.  பாடப்புத்தகங்கள் நலத்திட்டங்கள் பள்ளிகளில் கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது.  ஆனால் வகுப்பறையில் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை.


 முதலில்  பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்யுங்கள்


 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் ஆசிரியர் சமுதாயத்தின் சார்பில் நாங்கள் தெரிவிப்பதெல்லாம் இது போன்ற நிகழ்ச்சிகளால்  கற்றல் கற்பித்தல் திறன் மேம்படுவதற்கு வாய்ப்பே இல்லை!


 திராவிட மாடல் ஆட்சியில் ஆறாம் வகுப்பிற்கு செல்லும் மாணவர்கள்.  ஆறாம் வகுப்பு பாடத்திட்டத்திற்கும் அவர்கள் படித்து வந்த எண்ணும் எழுத்துக்கும் தொடர்பே இல்லாமல் பள்ளியை விட்டு விலகும் சூழல் கூட ஏற்படலாம்... நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். அந்த நிதி ஒதுக்கீடுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஏழை எளிய மாணவர்களின் கல்வி நலனில் பாதிப்பினை ஏற்படுத்த வேண்டாம்!



Follow this link to join ramanibabu.blogspot.com WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் ஆசிரியர் சமுதாயத்தின் சார்பில் நாங்கள் தெரிவிப்பதெல்லாம்....  இது போன்ற நிகழ்ச்சிகளால்  கற்றல் கற்பித்தல் திறன் மேம்படுவதற்கு வாய்ப்பே இல்லை!... இந்தப் பயிற்சியில் இதுவெல்லாம் இடம்பெற வேண்டுமா?. என ஆய்வு செய்து தீர்வு காண வேண்டுகிறோம்.



வா.அண்ணாமலை, 

ஐபெட்டோ 

அகில இந்தியச் செயலாளர். 

AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), 

ஆர்வலர் மாளிகை, 

52,நல்லதம்பி தெரு, 

திருவல்லிக்கேணி, 

சென்னை-600005. அலைபேசி:9444212060, 

மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.

Sunday 21 May 2023

BT DEPLOYMENT COUNSELLING தள்ளிவைப்பு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் மாநிலத்தலைவர் கு.தியாகராஜன் நன்றி அறிக்கை

 


மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து பணி நிரவல் கலந்தாய்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதன் அடிப்படையில் நமது கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையில் நடத்த திட்டப்பட்டிருந்த பணி நிரவல் கலந்தாய்வினை தள்ளி வைக்க உத்தரவு இட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.




விரைவில் ஆசிரியர் மனநிலையை உணர்ந்து நடவடிக்கை மேற்கொண்ட மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும், மதிப்புமிகு  பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களுக்கும் மதிப்புமிகு பள்ளிக்கல்வி இணை இயக்குநர்  (பணியாளர் தொகுதி) அவர்களுக்கும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் .



தொடர்ந்து ஆசிரியர் பணியில் அயராது உழைக்கும் ஒரே இயக்கம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறோம்

*நன்றி*

*கு.தியாகராஜன் மாநில தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்*

Friday 19 May 2023

FLASH NEWS:2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டுமே செல்லும் ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு



👉2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது 




👉2016 நவம்பர் மாதம் 2000 ருபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டது 




👉2000 ருபாய் நோட்டுக்கள் அச்சிடுவது 2018-2019 ஆண்டுகளில் நிறுத்தப்பட்டது 



👉செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளால் திரும்பப் பெறப்படும். 




👉புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டாலும் 2000 ரூபாய் நோட்டுக்கள் செப்டம்பர் 30 வரை செல்லுபடியாகும் 




👉மே மாதம் 23ம் தேதியிலிருந்து 2000 ரூபாய் நோட்டுக்களை அனைத்து வங்கிகளிலும் அளித்து மாற்றிக் கொள்ளலாம்




👉கையில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் தங்கள் கணக்கில் செலுத்திக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்




👉 செப்டம்பர் 30ந் தேதிக்குள் மாற்றிக் கொள்ள மத்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு வேண்டுகோள்



👉ஒரு முறை வங்கியில் 20000 ருபாய் வரை மாற்றிக்கொள்ளலாம் 

10 மற்றும் 11 பொது தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறுதல், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல், துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தல் பற்றிய செய்திக்குறிப்பு


10 மற்றும் 11 பொது தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறுதல், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல், துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தல் பற்றிய செய்திக்குறிப்பு

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



Follow this link to join ramanibabu.blogspot.com WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN




10-TH AND 11-TH RETOTAL INSTRUCTION

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




Follow this link to join ramanibabu.blogspot.com WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN




10TH துணைத்தேர்வு 

தேதிகள் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF


10 ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (Provisional Mark Certificate) எவ்வாறு பதிவிறக்கம் செய்ய வேண்டும்? பிழைகள் எவ்வாறு திருத்தப்பட வேண்டும்?


அரசுத் தேர்வுகள் இயக்குனர் 

உத்தரவு பதிவிறக்கம் செய்ய 

கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




Follow this link to join ramanibabu.blogspot.com WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN


10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஒரு பார்வை

👉தேர்வெழுதிய மொத்த மாணாக்கர்கள் எண்ணிக்கை - 9,14,320


👉 தேர்வெழுதிய மாணவியர் எண்ணிக்கை - 4,55,017


👉 தேர்வெழுதிய மாணவர்களின்  எண்ணிக்கை - 4,59,303


Follow this link to join ramanibabu.blogspot.com WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN


👉 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் எண்ணிக்கை - 8,35,614


👉 மாணவியர் 4,30,710


👉 மாணவர்கள் 4,04,904


👉 மொத்த தேர்ச்சி விகிதம் 91.39%


👉 மாணவிகள் தேர்ச்சி விகிதம்  94.66%


👉 மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16%


Follow this link to join ramanibabu.blogspot.com WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN


👉 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 3,718


👉 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் எண்ணிக்கை 1,026


👉 அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதம் - 87.45%


👉 அரசு உதவி பெறும் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் - 92.24%


👉 தனியார், சுயநிதி பள்ளிகள் தேர்ச்சி விகிதம் - 97.38%


Follow this link to join ramanibabu.blogspot.com WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN


👉 பெரம்பலூர் மாவட்டம் 97.67% பெற்று முதலிடம் பெற்றுள்ளது.


👉 சிவகங்கை மாவட்டம் 97.53% பெற்று இரண்டாமிடம் பெற்றுள்ளது.


👉 விருதுநகர் மாவட்டம் 96.22% பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளது.


👉 கன்னியாகுமரி மாவட்டம் 95.99% பெற்று நான்காம் இடம் பெற்றுள்ளது 


👉 தூத்துக்குடி மாவட்டம் 95.58% பெற்று ஐந்தாம் இடம் பெற்றுள்ளது 


👉 அரியலூர், ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளது 


👉 ராணிப்பேட்டை, காரைக்கால்  கடைசி இடம் பெற்றுள்ளது 


Follow this link to join ramanibabu.blogspot.com WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



👉 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 

ஆங்கிலம் 89, 

கணிதம் 3,649, 

அறிவியல் 3,584, 

சமூக அறிவியல் 320 பேர் சதமடித்துள்ளனர். 

தமிழில் 100க்கு 100 மதிப்பெண்கள் யாரும் எடுக்கவில்லை.


Follow this link to join ramanibabu.blogspot.com WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



👉10ம் வகுப்பு பாட வாரியான தேர்ச்சி விகிதம்:


● தமிழ் - 95.55%

● ஆங்கிலம் - 98.93%

● கணிதம் - 95.54%

● அறிவியல் - 95.75% 

● சமூக அறிவியல் - 95.83%


ஆசிரியர் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் 18 ஆண்டுகளாக பதவி உயர்வு பெறமுடியாமல் தவிக்கும் 12000 பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை




















18 வருடங்களாக பதவி உயர்வு இன்றி தவிக்கும் அலகு விட்டு அலகு மாறுதல்  மற்றும் ஈர்த்து கொள்ளப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல்  மூதுரிமையை  நிர்ணயம் செய்ய மாண்புமிகு பள்ளி கல்வித் துறை அமைச்சரிடம் அனைத்து பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்  கோரிக்கை



Follow this link to join my WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



அனைத்து பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டமானது 14.05.2023 அன்று திருநெல்வேலியில் மாநிலத் தலைவர் திரு செல்வராஜ்  தலைமையில் கூட்டப்பட்டது. இதில் 

மாநிலப் பொதுச் செயலாளர் திரு சுந்தரபாண்டியன், 

மாநிலப் பொருளாளர் திரு ராஜா முகம்மது, 

மாநில முதன்மை ஒருங்கிணைப்பாளர் திரு சந்திரன் 

செயற்குழு உறுப்பினர்கள் 

திரு சங்கர நாரயணன், 

திரு இராமநாதன்,

திரு குருவிநாயகம், 

திருமதி இந்துமதி, 

திருமதி மகராசி, 

திருமதி செண்பகலதா 

ஆகியோர் கலந்து கொண்டனர். 



Follow this link to join my WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN




அக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மற்றும் பள்ளி கல்வித் துறை உயர் அதிகாரிகளிடம்   பின்வரும் பணப்பலன் இல்லா கோரிக்கையினை நடைமுறைப்படுத்திட வேண்டி  அக் கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.  


 2003 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு தொகுப்பூதியத்தில் பட்டதாரி ஆசிரியர்களாக தொடக்கக்கல்வி இயக்ககம் கீழ் உள்ள நடுநிலைப்பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டோம்.    

                         

 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம்  உயர்த்தப்படும் போது ஈர்த்துக் கொள்ளப்பட்டும் மற்றும் 2009-இல் அலகு விட்டு அலகு மாறுதல் மூலம் தொடக்கக்கல்வி இயக்ககத்தில் இருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு அதே பணி நிலையில் பட்டதாரி ஆசிரியர்களாக மாறுதல் பெற்றோம். 



Follow this link to join my WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



தொடக்கக்கல்வி இயக்ககத்தில் இருந்து பள்ளிக்கல்வித் துறைக்கு வந்த நாள் தான் எங்களது பணி மூப்புக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. 


இதனால் கடந்த 18 ஆண்டுகளாக எந்தவித பதவி உயர்வும் பெறாமல் அதே நிலையில் பட்டதாரி ஆசிரியர்களாக தொடர்ந்து பணிபுரிந்து வருகிறோம்.


ஒரே பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக 17 வருடங்களாக பணியாற்றியும் அப்பள்ளி தரம் உயர்த்தப்படும் போது பள்ளிக் கல்வித்துறைக்கு ஈர்த்து கொள்ளப்பட்ட நாளினைக் பணியில் சேர்ந்த நாளாகக் கொண்டு வேறு மாவட்டங்களுக்கு பணி நிரவல் செய்யப்பட்டு பட்டதாரி ஆசிரியர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.



Follow this link to join my WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN




பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்களின் உத்தேச முன்னுரிமைப் பட்டியல்  தமிழ்நாடு அரசு பணியாளர்கள்  நிபந்தனை சட்டம்  2016 விதி 40(2) ன் படி ஒரு பதவியில் பணிமூப்பு நிர்ணயம் செய்யும்போது ஒன்றுக்கும் மேற்பட்ட முறையிலான நியமன முறை இருப்பின் (நேரடி நியமனம், பதவி உயர்வு, கருணை அடிப்படை, துறை மாறுதல் மற்றும்  பிற) அப்பதவியில் பணியில் சேர்ந்த நாளை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்ற விதிப்படி 2019ம் ஆண்டு அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் 18258/சி1/இ1/2018 நாள்:26.07.2019 ன் படி தயார் செய்யப்பட்ட முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் விதி 40(2) ன் படி உரிய இடத்தில் எங்களது பெயர்கள் உள்ளன. 



Follow this link to join my WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN




மேற்கண்ட செயல்முறைகள் மற்றும் அதன்படி தயார் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் உத்தேச முன்னுரிமைப் பட்டியல் 2019 ம் ஆண்டில் மாண்புமிகு சென்னை உயர் நீதி மன்றத்தில் உயர்திரு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


எனவே பள்ளிக் கல்வி இயக்குநரால் வெளியிடப்பட்ட முன்னுரிமைப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு (முதுகலை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்) கலந்தாய்வினை நடத்துமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.



Follow this link to join my WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN




மேலும் அரசாணை(நிலை) எண் 48, நாள் 01.03.2023 ன் படி 4 மாவட்டங்களிலிருந்து    சென்னை பெருமாநகராட்சியின் கீழ் இணைக்கப்படவுள்ள 139 பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் முதுநிலை தமிழ்நாடு அரசு பணியாளர் பணி விதிச் சட்டம் 2016 ன் படி  பாதுகாக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 


மேலும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால், நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆதிதிராவிட மற்றும் கள்ளர் துறைப்பள்ளிகள் இணைக்கப்படவுள்ளதாகவும் இணைக்கப்படும் ஆசிரியர்களின் மூதுரிமை பாதுகாக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதேபோல்  ஒரே துறையின் கீழ் பணிபுரிந்து பள்ளிக்கல்விக்கு அலகு விட்டு அலகு மாறுதல் மற்றும் ஈர்த்துக் கொள்ளப்பட்டு 18 வருடங்களாக பணி மூதுரிமை இழந்து  நிற்கும் 12000 க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களாகிய எங்களுக்கும் மேற்கண்ட அரசாணைகளின் படி பணியில் சேர்ந்த நாள் முதல் மூதுரிமை நிர்ணயிக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.            



Follow this link to join my WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN





மேற்காணும் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.


அனைத்து பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை அடங்கிய கடிதம் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Thursday 18 May 2023

10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை நேரடியாக தெரிந்துகொள்ள


Follow this link to join my WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 

கீழ்கண்ட ஏதேனும் ஒரு லிங்கில் சென்று 

உங்கள் தேர்வு முடிவை தெரிந்துகொள்ளலாம் 


உங்கள் REG.NO மற்றும் உங்கள் பிறந்த தேதியை 

கொடுத்து தேர்வு முடிவை தெரிந்துகொள்ளலாம் 




Follow this link to join my WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN




10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 

19.05.2023 அன்று காலை 9 மணிக்கும் 

11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 

19.052023 அன்று பிற்பகல் 2 மணிக்கும் 

தெரிந்து கொள்ளலாம் 




Follow this link to join my WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN




அனைத்து மாணவர்களும் அதிக மதிப்பெண் பெற்று தேர்வில் 

வெற்றி பெற வாழ்த்துகள் 




link 1

👇👇

CLICK HERE




link 2

👇👇

CLICK HERE




Follow this link to join my WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN

Wednesday 17 May 2023

வீடு கட்டும் முன் பணம் ( HBA ) ₹60 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு

 


👇👇

CLICK HERE TO DOWNLOAD G.O

TN SED School App new update Version 0.0.66 direct link

 


TN SED School App 

New Update Direct Link


*TN SED*
*School App*
*New update*
*Version 0.0.66*
*direct link*

TNSED schools App


What's is new..?


 Teacher training feedback questions updated for EE*


Bug Fixing and Performance Improvements


UPDATED ON  31 MAY- 2023


Version: Now 0.0.66



Follow this link to join my WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN




TNSED SCHOOL APP

DIRECT UPDATE LINK

👇

CLICK HER TO UPDATE



Follow this link to join my WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN

Tuesday 16 May 2023

மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்கள் பெற என்னென்ன தேவை


பள்ளி திறக்க இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் அனைவரும் தன் பிள்ளைகளுக்கு ஜாதி சான்றிதழ், 

இருப்பிடம்சான்றிதழ், 

வருமான சான்றிதழ் 

போன்ற சான்றிதழ்கள் வாங்க 

அரசு இ சேவை மையங்களுக்கு 

மக்கள் அதிகளவில் வருகிறார்கள். 


ஆனால் அந்த சான்றிதழ்களை 

விண்ணப்பிக்க என்னென்ன தேவை 

என்று அறியாமல் உள்ளனார்.


அதனால் பல தடவை 

அலைந்து வருகிறார்கள் 

மக்கள் கஷ்டம் அறிந்து 

இந்த தகவலை 

இங்கு என்னென்ன தேவை என பதிவு செய்கிறேன்.


 

முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்


புகைப்படம்

குடும்ப அட்டை

ஆதார் அட்டை 

மாற்றுச்சான்றிதழ் (TC)

மதிப்பெண் பட்டியல்(10,12)

ஜாதி,வருமானம் சான்றிதழ்

முதல் பட்டதாரி பத்திரம்

குடும்ப உறுப்பினர்கள் அனைவருடைய தாத்தா பாட்டி உட்பட கல்வி சான்றிதழ்

தொலைப்பேசி (otp வரும் அதனால்)

அனைத்தும் அசல் மற்றும் நகல்




ஜாதி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்


குடும்ப அட்டை 

ஆதார் அட்டை

மாற்றுச்சான்றிதழ் (TC)அல்லது தந்தையின் மாற்றிச்சான்றிதழ் (அ) தந்தையின் ஜாதி சான்றிதழ்

புகைப்படம்

தொலைப்பேசி otp வரும் அதனால்

அனைத்தும் அசல் மற்றும் நகல் வேண்டும்




வருமான சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்


குடும்ப அட்டை

ஆதார் அட்டை

வருமான சான்று (payslip) + பான்கார்டு

தொலைப்பேசி otp வரும் அதனால்

புகைப்படம்

அனைத்தும் நகல் மற்றும் அசல் தேவை




இருப்பிட சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்


குடும்ப அட்டை

ஆதார் அட்டை

தொலைபேசி otp வரும் அதனால்

புகைப்படம்

அனைத்தும் நகல் மற்றும் அசல்


இந்த செய்தி மற்றவர்களுக்கு பகிர்ந்து மக்களுக்கு உதவுங்கள் மேலும் அந்தந்த ஊர்களிலும் உள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கம் (society)லும் மற்றும் அருகில் உள்ள பொது சேவை மையங்கள் கணினி மையங்களில் இந்த சான்றிதழ்களை விண்ணப்பிக்க முடியும் இதன் மூலம் நீங்கள்  உங்களுடைய

அலைச்சல் குறைக்கலாம்

HM VACANCY SO FOR 16-05-23 AFTER DISTIRICT TO DISTRICT TRANSFER


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

பல மாவட்ட ஆட்சியர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு



நாகை ஆட்சியர் அருண் தம்புராஜ், கடலூர் ஆட்சியராக நியமனம்




அரியலூர் ஆட்சியராக அன்னீ மேரி ஸ்வர்னா நியமனம்




கிருஷ்ணகிரி ஆட்சியர் தீபக் ஜேகப், 




தஞ்சை ஆட்சியராக நியமனம்




புதுக்கோட்டை ஆட்சியராக மெர்சி ரம்யா நியமனம், 




நாமக்கல் ஆட்சியராக உமா நியமனம்




காஞ்சி ஆட்சியராக கலைச்செல்வி மோகன் நியமனம், 





செங்கல்பட்டு ஆட்சியராக கமல் கிஷோர் நியமனம்




மதுரை ஆட்சியராக சங்கீதா நியமனம், 





சிவகங்கை ஆட்சியராக ஆஷா அஜித் நியமனம்




ராமநாதபுரம் ஆட்சியராக விஷ்னு சந்திரன் நியமனம், 





தூத்துக்குடி ஆட்சியராக ராகுல்நாத் நியமனம்




திருப்பூர் ஆட்சியராக கிருஸ்துராஜ் நியமனம், 




ஈரோடு ஆட்சியராக ராஜ கோபால் சுங்கரா நியமனம்




திண்டுக்கல் ஆட்சியராக பூங்கொடி நியமனம், 




நாகை ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் நியமனம்




கிருஷ்ணகிரி ஆட்சியராக சராயு நியமனம்

தொடக்கக் கல்வித் துறைக்கு திருத்திய கலந்தாய்வு அட்டவணை வெளியீடு



DEE

நடுநிலைப்பள்ளி 

தலைமை ஆசிரியர் மாறுதல் 

கலந்தாய்வு 

19.05.2023



DEE

கடந்த ஆண்டுகளில் 

பணிநிரவல் 

பட்டதாரி ஆசிரியர்களை 

மீளத்தாய் ஒன்றியத்திற்கு 

ஈர்த்தல் 

22.05.2023


DEE

கடந்த ஆண்டுகளில் 

பணிநிரவல் 

இடைநிலை  ஆசிரியர்களை 

மீளத்தாய் ஒன்றியத்திற்கு 

ஈர்த்தல் 

23.05.2023


DEE

பட்டதாரி ஆசிரியர் 

பணிநிரவல் 

(ஒன்றியத்திற்குள்)

24.05.2023



DEE

இடைநிலை 

ஆசிரியர் 

பணிநிரவல் 

(ஒன்றியத்திற்குள்)

25.05.2023



DEE

பட்டதாரி ஆசிரியர் 

மாறுதல் 

கலந்தாய்வு 

(ஒன்றியத்திற்குள்)

26.05.2023



DEE

தொடக்கப்பள்ளி 

ஆசிரியர் 

மாறுதல் 

கலந்தாய்வு 

2705.2023



DEE

இடைநிலை ஆசிரியர் 

மாறுதல் கலந்தாய்வு 

29.05.2023

(ஒன்றியத்திற்குள்)



👇👇

click here to download pdf

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளன்று மாணவர்களுக்கு பாடநூல்கள் மற்றும் இதர கல்வி உபகரணப் பொருட்களை வழங்கிட பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு



👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF