Search This Blog

Wednesday 7 September 2022

மாற்றுத்திறனாளி ஆசிரியைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்

தருமபுரி மாவட்டத்தில் ஔவையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் ஆய்வு மேற்கொள்ளும் போது வகுப்பில் தமிழ் பாடம் நடத்திக்கொண்டு இருந்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் தமிழ்ச்செல்வி அவர்களை பாராட்டி அவருடன் கவிஞர்.வைரமுத்து அவர்களை கைப்பேசி மூலம் பேசவைத்தார் 

தான் வகுப்பறையில் நடத்திய கவிதையின் இயற்றிய கவிஞரே தொலைபேசியில் தன்னுடன் பேசியதை எண்ணி ஆசிரியர் மனம் மகிழ்ந்தார்

மனம் மகிழ்ந்த ஆசிரியை, 'இன்று எனது வாழ்நாளில் மகிழ்ச்சிகரமான நாள்' என அமைச்சர் அன்பில் மகேஷிடம் நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

 இதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், "ஆம், எனது வாழ்நாளிலும் மகிழ்ச்சிகரமான நாள்தான்!" எனக் குறிப்பிடுள்ளார்

வகுப்பில் இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருமே எதிர்பாராத நடந்த இந்த சம்பவத்தை எண்ணி மனம் மகிழ்ந்து அமைச்சரை வாழ்த்தி நன்றி தெரிவித்தனர் 






No comments:

Post a Comment