Search This Blog

Wednesday 27 October 2021

மாணவர்களிடம் நேரில் குறைகளை கேட்டறிந்த முதல்வர்

செங்கல்பட்டு மாவட்டம் மரக்காணம் அருகே கடப்பாக்கத்தில் உள்ள திரு.பெ.கிருஷ்ணா  அரசு மேல்நிலைப்பள்ளியில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். குறைகளை கேட்டறிந்த முதல்வர் மாணவர்களுக்கான மதிய உணவையும் நேரில் பார்வையிட்டார்.

அப்போது மாணவர்களிடம் உரையாடிய முதல்வர் குறைகளை கேட்டறிந்தார். பின், மாணவர்களுக்கு சமைத்த மதிய உணவையும் நேரில் பார்வையிட்டார்

பள்ளியின் தலைமை ஆசிரியர் முதல்வரிடம் பள்ளியில் 488 மாணவர்கள் படித்து வருவதாகவும் மாணவர்கள்  சிறப்பாக உள்ளதாகவும் கூறினார்.

உயர்பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர் 




No comments:

Post a Comment