Search This Blog

Friday 22 October 2021

பூஜ்ய இடமாறுதல் ரத்து மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு நேரில் நன்றி ஒட்டுமொத்த ஆசிரியர்கள் சார்பாக கு.தியாகராஜன். மாநிலத் தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்



ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர்களுக்கு பூஜ்ஜிய கலந்தாய்வு நடத்த வேண்டாம் என முடிவெடுத்து அதன் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு பூஜ்ஜிய கலந்தாய்வு நிச்சயம் இல்லை என்ற அறிவிப்பை அதிகாரிகள் மூலம் நேற்று வெளியிட செய்து லட்சக்கணக்கான ஆசிரியர்களை நிம்மதி பெருமூச்சு அடைய செய்த மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை இன்று நேரில் சந்தித்து ஒட்டுமொத்த ஆசிரியர்கள் சார்பாக நன்றியினையும், வாழ்த்துக்களை தெரிவித்தேன்.மேலும்  ஆசிரியர்கள் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் அவர் முன் வைக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் கனிவுடன் பரிசீலித்த மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆசிரியர் நலன் சார்ந்த கோரிக்கைகள் நிச்சயம் படிப்படியாக நிறைவேற்ற உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறார். மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் 

என்றென்றும் நன்றியுடன் 

கு.தியாகராஜன். மாநிலத் தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

No comments:

Post a Comment