Search This Blog

Sunday, 19 July 2026

தகுதித் தேர்வெழுதிய ஆசிரியர் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? நன்றி எழுத்தாளர் மணி கணேசன்



தகுதித் தேர்வெழுதிய ஆசிரியர் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?





மழை விட்டும் தூவானம் நிற்கவில்லை என்பார்கள். அதுபோல ஆசிரியர் பெருமக்களைச் சிறப்பாக வைத்து செய்த சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு இரு தாள்களும் வெற்றிகரமாக அண்மையில் நடந்து முடிந்துள்ளது. இருப்பினும் ஆசிரியர்கள் மத்தியில் இத்தேர்வுகள் குறித்து பல்வேறு வகையான அதிருப்தி நிலவி வருவதைக் காண முடிகிறது. 





இதற்கு மிகவும் இன்றியமையாத காரணமாகக் கூறப்படுவது யாதெனில், இரண்டு தேர்விலும் கேட்கப்பட்ட கேள்விகள் மிகக் கடினமானவை என்பதாகும். இஃது ஒரு குற்றச்சாட்டாகவே உள்ளது. குறிப்பாக, இதுவரை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் இந்த தேர்வில் தான் அதிகளவில் கூற்று, காரணம் சார்ந்த வினாக்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. 






அதாவது, ஒரு வினாவிற்கு மிகச் சரியாக இரண்டு விடைகளும் தெரிந்திருந்தால் தான் துல்லியமான முறையில் விடையளித்து தக்க மதிப்பெண் பெறவியலும். இதில் ஒன்று தெரியவில்லை என்றாலும் உரிய மதிப்பெண்ணை இழக்க நேரிடும். அதுபோன்று, பொருத்துக பகுதியில் குறைந்தபட்சம் இரண்டு வினாக்களுக்காவது சரியான விடை தெரிந்திருப்பது முக்கியம். 





பணியில் தொடர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டியது அவசியம் என்பது உலகிலேயே ஒரு விசித்திரமான தீர்ப்பாகும்‌.





 இதுபோன்றதொரு ஊழியர் விரோத முடிவு என்பது வேறு எந்த துறையிலும் கிடையாது. குறிப்பாக, தொடக்கக்கல்வி நிலையிலும் இடைநிலைக் கல்வி நிலையில் உள்ள உயர்நிலைப்பள்ளி நிலையிலும் உள்ள ஆசிரியர் பெருமக்கள் அனைவரையும் இந்த சமூகம் கிள்ளுக்கீரை போல் பாவித்து வருவது என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஏனையோர் அனைவரும் வானத்திலிருந்து குதித்து வந்த தேவதூதர்களாக கருதுவதும் ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்களிப்பதும் என்பது ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு வைப்பதற்கு ஒப்பாகும்.






தமிழ்நாட்டைப் பொருத்தவரை தொடக்கப்பள்ளிகள் முதற்கொண்டு மேனிலைப்பள்ளிகள் வரை நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் உரிய கல்வித் தகுதிகளுடன் நியமனம் செய்யப்பட்டவர்களே ஆவார்கள். இதுதவிர, 1995 ஆம் ஆண்டிலேயே இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பணி நியமனப் போட்டித் தேர்வு மற்றும் அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு நடத்தி ஆளெடுத்த வரலாறு ஈண்டு அறியத்தக்கது. 






அதன்பின், 2004-2006 தொகுப்பூதியம் காலத்திலும் கூட, பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் முறையே ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வெழுதி வெற்றி பெற்றவர்களே ₹4000 தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவையனைத்தும் அவ்வக்கால ஆசிரியர் தகுதித் தேர்வு என்பதை நினைவில் கொள்வதே சாலச்சிறந்தது.






அதன்பின், 2012 இல் ஒற்றை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் செய்யப்பட்டு வருவது நடைமுறையில் இருந்து வருகிறது. இதில் பாவப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் விதிவிலக்காகப் பணி நியமனப் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பானது பலதரப்பட்ட எதிர்ப்புகளின் காரணமாகக் கைவிட்டுள்ளது நோக்கத்தக்கது. 






1995, 2002, 2012 ஆகிய காலகட்டங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு ஆசிரியர் போட்டித் தேர்வு மற்றும் தகுதித் தேர்வு என்று பெயர்கள் வேண்டுமானால் வேறுவேறாக இருக்கலாம். ஆனால் நோக்கம் என்பது ஒன்று தான் என்பதைப் புரிந்து கொள்ளுதல் இன்றியமையாதது. 






அதேபோல், 'அவரவர் காலகட்ட நியாயம் அவரவர்க்கு' என்பதில் மாற்றுக் கருத்து தேவையில்லை. குறிப்பாக, கொம்பு முளைத்த ஆசிரியர் என்பவர் இங்கு ஒருவருமில்லை. வெறும் ஒற்றை தகுதித் தேர்வு எழுதி (அதுவும் பணி நியமனத்திற்கானது) அந்த வெற்றியையே பதவி உயர்வுக்கும் கருத வேண்டும் என்பது சரி என்று நீதிமன்ற வாசலில் நித்தமும் குடியிருப்போருக்கு ஒரு கேள்வி.






அன்றைய நியமனப் போட்டித் தேர்விலும் இன்றைய தகுதித் தேர்விலும் வெற்றி வாகை சூடியவர்களை விட நீங்கள் எந்தவகையில் உயர்ந்தவர்கள்? என்று சம்மந்தப்பட்டவர்கள் கேட்டால் அதற்கு பதில் இருக்க முடியாது.






இந்த நவீன உலகம் மனிதர்களை இழிபிறவிகள் ஆக்கி விட்டது என்றே சொல்ல வேண்டும். இதில் ஆசிரியர்களும் விதிவிலக்கல்லர். தமக்கான காலமும் நேரமும் வரும்வரை காத்திருக்க பதற்ற மனம் பொறுமையைக் கடைபிடிப்பதில்லை. மாறாக, எப்படியேனும் சகுனி வேலை புரிந்து 'ஓட்டைக்குள் சட்டம்; சட்டத்திற்குள் ஓட்டை' இருப்பதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எல்லோரையும் ஏறி மிதித்து முதல் ஆளாகச் சென்று விட வேண்டும் என்கிற குரூர குறுக்குப் புத்தியில் இருப்பது யாருக்கும் நல்லதல்ல.






ஐம்பது வயதைக் கடந்த நல்லாசிரியர் பெருமக்கள் பலருக்கும் பணியில் தொடரவும் பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம் என்கிற உத்தரவு என்பது பெரும் மன உளைச்சலைத் தந்துவிட்டது உண்மை. 






மேலும், தம் பணி அனுபவத்திற்கு ஈடாகவோ அதற்கு குறைவாகவோ வயதுடைய சக ஆசிரியர்களின் ஏளனத்திற்கு எங்கே தாம் ஆட்பட்டு விடுவோமோ என்கிற பதற்றம் என்பது ஒரு மனிதத்தன்மையற்ற நிகழ்வாகும். இதில் பல்வேறு உடல் உபாதைகளும் தொந்தரவுகளும் வேறு. 






இவற்றையெல்லாம் புறந்தள்ளி கட்டாயமாக எழுதித் தீர வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தலைவணங்கி எழுத விழைந்த ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் எத்தனையெத்தனை கடினப் பாடப்பகுதிகள்! கடந்த நவம்பர் 2025 இல் நடைபெற்ற எல்லோருக்குமான ஆசிரியர் தகுதித் தேர்வுகளைக் காட்டிலும் பன்மடங்கு கடினமாக அண்மையில் ஜூலை 2026 இல் நடந்து முடிந்த தேர்வு இருந்ததாக எழும் பரவலான கருத்தை எளிதில் எடுத்துக்கொள்ள முடியாது. எளிய வகையில் இத்தேர்வு இருந்திருக்க வேண்டியதில்லை. அதேவேளையில் இவ்வளவு கடினம் இருக்க வேண்டுமா என்பது சிந்திக்கத் தக்கது.






பொதுவாகவே, தமிழ்நாட்டில் உரிய கல்வித்தகுதியுடன் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியருக்குக் கட்டாய ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி என்பது துரதிர்ஷ்டவசமானது. சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை நாட்களில் நடத்தப்பட்ட பணிபுரியும் நிரந்தர, தற்காலிக, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்விற்கு முதல் நாள் வரை பள்ளிப் பணியைச் செவ்வனே நிறைவேற்றி நேரடியாகத் தேர்வு மையத்திற்கு தேர்வெழுத வந்தவர்கள் பலர் ஆவார்கள். ஒரு மாத காலத்திற்கு மாலை நேரத்தில் ஒன்றரை மணி நேரம் சிறப்பு வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டன. இவர்களுக்கு வேறெந்த சலுகைகளும் இத்தேர்வின் பொருட்டு வழங்கப்படவில்லை. 






இச்சூழலில் அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஏனைய மாநிலங்களில் நடைமுறையில் காணப்படுவது போன்று சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வின் தேர்ச்சிக்கான மதிப்பெண்கள் குறைப்பு அல்லது கூடுதல் உயர்கல்வித் தகுதிக்கு அதிகபட்சமாக ஐந்து மதிப்பெண்களும் மற்றும் பணியனுபவ காலத்திற்கு அதிகபட்சமாக பத்து மதிப்பெண்களும் மாநில அரசு கொள்கை முடிவெடுத்து வழங்குதல் என்பது சலுகை அல்ல, உரிமையாகும். 





இதன் அடிப்படையில் இத்தேர்வு சார்ந்த நீதிமன்ற வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விரைவில் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு பல்வேறு மனக் குழப்பத்தில் தவிக்கும் ஆசிரியர் சமூகத்தை இந்த அரசு தாயுள்ளத்துடன் காக்க முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.


எழுத்தாளர் மணி கணேசன்

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 59 - VIII ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல்


 

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 59 - VIII ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல்








மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 





ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 





இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 





இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 




தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)




தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 




தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 





இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 





இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 





இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 






இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 7 மணி அளவில் நடைபெறும் 





மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 





ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 





அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 





இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 





இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 




இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 



வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN




இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 


இரு தேர்வுகளுக்கான லிங்க் அனுப்பப்பட்டுள்ளது  (8-அறிவியல் மற்றும் 8-சமூக அறிவியல்)



அறிவியல் 

8 ஆம் வகுப்பு 


1. விசை மற்றும் அழுத்தம் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM




8 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

1. வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை 

(ஆங்கிலேயே மராத்தியர் போர்கள் முதல் பாடம் இறுதி வரை) 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM



மாணவர்களின் கவனத்திற்கு 


மேற்கண்ட அனைத்து தேர்வுகளையும் நீங்கள் ஆங்கில வழியில் எழுதும் வழிமுறைகள் 


STEP 1

CLICK HERE TO WRITE ONLINE EXAM என்பதை CLICK செய்தவுடன் உங்களுக்கு தேர்வுக்கான GOOGLE FORM வினாத்தாள் OPEN ஆகும் 


STEP 2

வலது ஓரத்தில் மேலே தெரியும் மூன்று புள்ளிகளை CLICK செய்யவும் 


STEP 3

அதில் தோன்றும் மெனுவில் கீழே TRANSLATE என வரும் அதனை கிளிக் செய்யவும் 


STEP 4

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும். அவ்வாறு தெரியவில்லை எனில் அதில் தெரியும் மொழியில் ENGLISH என்பதை தேர்வு செய்யவும் 



STEP 5

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும் நீங்கள் தேர்வு எழுதலாம் 





நாளை தேர்வுக்கான பாடப்பகுதிகள் 


7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 


1. புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும் 

2. தமிழ்நாட்டில் கலையும் கட்டடக்கலையும் 

3. நிலவரைபடத்தை கற்றறிதல் 





மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

9952329008

9361564416


த. நெல்சன் 

பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)

9500870040



உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும்  இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள் 



அன்புடன் 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 


பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்க தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை


 



பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்க தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை




மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்க மற்றும் சினிமா தொழிலாளர்களின், 1ம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு, 2026-27ம் நிதி ஆண்டில், ரூ.1000 முதல் 25000 வரை கல்வி உதவித் தொகை பெற, மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன 






கீழ்கண்ட இரண்டு தேசிய கல்வி உதவித் தொகை வலைதளத்தில், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாணவர்கள் ஒரு முறை பதிவு மூலம் மட்டுமே சமர்ப்பிக்கலாம்.






LINK 1

👇

CLICK HERE




LINK 1

👇

CLICK HERE






ஒவ்வொரு மாணவரும், தங்களுக்கான, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின், மைய வங்கி அமைப்பு என்ற தொழில்நுட்ப முறையில், தங்களுடைய சேமிப்புக் கணக்கானது தேசிய மின்னணு பரிவர்த்தனை வசதிகளை பெற்றிருக்க வேண்டும். 





விண்ணப்பதாரர்கள், ஆதார் எண்ணை சேமிப்பு வங்கி கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே, கல்வி உதவித் தொகை பெற தகுதியுடையவராக கருதப்படுவர். 





இத்திட்டத்தின் கீழ், கல்வி நிதி உதவித்தொகை பெற, விண்ணப்பதாரர்கள், தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்துவதற்கு, மின்னணு முறையில் ஒப்புதல் வழங்க வேண்டும்.





கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு, மிகவும் முக்கியமானதாகும். பதிவு செய்யப்படாத பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கீழ்கண்ட லிங்க் மூலம் தேசிய கல்வி உதவித்தொகை வலைதளத்தில் முதலில் பதிவு செய்ய வேண்டும் 



LINK 1

👇

CLICK HERE




LINK 2

👇

CLICK HERE




பின்பு, மேற் குறிப்பிட்ட வலை தளத்தில், குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி, அனைத்து விண்ணப்பங்களையும் ஆராய்ந்து, ஒப்புதல் வழங்கி, தங்களது கல்வி நிறுவனங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சமர்ப்பிக்க வேண்டும்.





வகுப்பு ஒன்று முதல் பத்து வரை விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் அடுத்த மாதம் 31ம் தேதி.





அனைத்து உயர்கல்வி மாணவர்களின் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசிநாள் 31.10.2026. 




மேலும் விளக்கங்கள் மற்றும் உதவி பெறுவதற்கு


மத்திய நல ஆணையர் அலுவலகம், 

தொழிலாளர் நல அமைப்பு, 

தரைத்தளம், 

சிட்கோ நிர்வாக கிளை அலுவலக வளாகம், 

திரு.வி.க.தொழில் பூங்கா கிண்டி, 

சென்னை - 600032. 




மின்னஞ்சல் 

👇

wclwo.chn-mole@gov.in 




தொலைபேசி எண்

👇

044-29530169

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 58 - VII ஆம் வகுப்பு சமூக அறிவியல் (MERGED LESSONS)

  


NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 58 - VII  ஆம் வகுப்பு சமூக அறிவியல் (MERGED LESSONS)








மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 





ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 





இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 





இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 




தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)




தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 




தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 





இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 





இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 





இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 






இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 7 மணி அளவில் நடைபெறும் 





மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 





ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 





அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 





இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 





இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 




இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 



வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN



இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 


7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் (MERGED LESSONS)


1. சுற்றுலா 

2. மாநில அரசுகள் 

3. முகலாய பேரரசு 

4. மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி 

5. ஊடகமும் ஜனநாயகமும் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM





மாணவர்களின் கவனத்திற்கு 


மேற்கண்ட அனைத்து தேர்வுகளையும் நீங்கள் ஆங்கில வழியில் எழுதும் வழிமுறைகள் 


STEP 1

CLICK HERE TO WRITE ONLINE EXAM என்பதை CLICK செய்தவுடன் உங்களுக்கு தேர்வுக்கான GOOGLE FORM வினாத்தாள் OPEN ஆகும் 


STEP 2

வலது ஓரத்தில் மேலே தெரியும் மூன்று புள்ளிகளை CLICK செய்யவும் 


STEP 3

அதில் தோன்றும் மெனுவில் கீழே TRANSLATE என வரும் அதனை கிளிக் செய்யவும் 


STEP 4

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும். அவ்வாறு தெரியவில்லை எனில் அதில் தெரியும் மொழியில் ENGLISH என்பதை தேர்வு செய்யவும் 



STEP 5

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும் நீங்கள் தேர்வு எழுதலாம் 





இன்று (மாலை) தேர்வுக்கான பாடப்பகுதிகள் 

இரு தேர்வுகளுக்கான லிங்க் அனுப்பப்படும் (8-அறிவியல் மற்றும் 8-சமூக அறிவியல்)


அறிவியல் 

8 ஆம் வகுப்பு 


1. விசை மற்றும் அழுத்தம் 



சமூக அறிவியல் 

1. வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை PART - 2

(ஆங்கிலேயே - மராத்தியர் போர் முதல் பாடம் இறுதி வரை)



மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

9952329008

9361564416


த. நெல்சன் 

பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)

9500870040



உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும்  இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள் 



அன்புடன் 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 


Friday, 17 July 2026

பள்ளிக் கல்வி - 2026-27 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் தனித்திறமைகளை கொண்டாடும் கலைத்திருவிழா போட்டிகள் நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - சார்ந்து இயக்குநர்களின் செயல்முறைகள்

 


பள்ளிக் கல்வி - 2026-27 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் தனித்திறமைகளை கொண்டாடும் கலைத்திருவிழா போட்டிகள் நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - சார்ந்து இயக்குநர்களின் செயல்முறைகள்



கலைத்திருவிழா என்பது பள்ளிகளில் ஆண்டுதோறும் நடத்தப்படும் முக்கியமான கலை மற்றும் பண்பாட்டு விழாவாகும்.




மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரவும், அவற்றை அடையாளம் கண்டு மேம்படுத்தவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.





பாடல் நடனம் ஓவியம் நாடகம் இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு கலை வடிவங்களில் மாணவர்கள் தங்களது படைப்பாற்றலையும் திறன்களையும் வெளிப்படுத்துவதன் மூலம் தன்னம்பிக்கை தலைமைத்துவம் போன்ற திறன்களை வளர்த்துக்கொள்கின்றனர் 





மேலும் இவ்விழாவானது மாணவர்களிடையே ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை ஊக்குவிப்பதோடு அவர்களின் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமைகிறது 





2026-2027 ஆம் ஆண்டிற்கான கலைத்திருவிழா போட்டிகளை "இளையோர் தினம்" என்ற மையக்கருத்தினை அடிப்படையாகக்கொண்டு பள்ளி வட்டாரம் மாவட்டம் மற்றும் மாநில அளவில் பின்வரும் 5 பிரிவுகளில் அரசுப்பள்ளிகளுக்கு தனியாகவும், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு தனியாகவும் நடத்தப்படுகிறது 





கலைத்திருவிழா 2026-2027 போட்டிப் பிரிவுகள் மற்றும் எண்ணிக்கைகள் 



பிரிவு 1

1 மற்றும் 2 ஆம் வகுப்பு 

9 போட்டிகள் 



பிரிவு 2

3 முதல் 5 ஆம் வகுப்புகள் 

15 போட்டிகள் 



பிரிவு 3

6 முதல் 8 ஆம் வகுப்பு 

18 போட்டிகள் 





பிரிவு 4

9 மற்றும் 10 ஆம் வகுப்பு 

32 போட்டிகள் 




பிரிவு 5

11 மற்றும் 12 ஆம் வகுப்பு 

32 போட்டிகள் 




முக்கிய தேதிகள் 


11 மற்றும் 12 வகுப்புகளுக்கான போட்டிகள் தேதிகள் 

(மாநில போட்டிகள் நடைபெறும் இடம் விழுப்புரம் மாவட்டம்)

பள்ளியளவில் 

23.07.2026 முதல் 06.08.2026

வட்டார அளவில் 

11.08.2026 முதல் 14.08.2026

மாவட்ட அளவில் 

20.08.2026 முதல் 27.08.2026

மாநில அளவில் 

07.10.2026 (அரசு பள்ளிகள்)

08.10.2026 (அரசு உதவி பெரும் பள்ளிகள்)




9 மற்றும் 10 வகுப்புகளுக்கான போட்டிகள் தேதிகள் 

(மாநில போட்டிகள் நடைபெறும் இடம் தஞ்சாவூர் மாவட்டம்) 

பள்ளியளவில் 

23.07.2026 முதல் 04.08.2026

வட்டார அளவில் 

11.08.2026 முதல் 14.08.2026

மாவட்ட அளவில் 

20.08.2026 முதல் 27.08.2026

மாநில அளவில் 

07.10.2026  (அரசு பள்ளிகள்)

08.10.2026 (அரசு உதவி பெரும் பள்ளிகள்) 





6-8 போட்டிகள் தேதிகள் மற்றும் இடங்கள் 

(மாநில போட்டிகள் நடைபெறும் இடம் கோயமுத்தூர் மாவட்டம்)

பள்ளி அளவில் 

03.08.2026 முதல் 14.08.2026

வட்டார அளவில் 

01.09.2026 முதல் 09.09.2026

மாவட்ட அளவில் 

08.10.2026 முதல் 15.10.2026

மாநில அளவில் 

27.10.2026 (அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள்) 




3-5 போட்டிகள் தேதிகள் மற்றும் இடங்கள் 

பள்ளிகள் அளவில் 

03.08.2026 முதல் 14.08.2026

குருவள மையம் அளவில் 

19.08.2026 முதல் 21.08.2026

வட்டார அளவில் 

01.09.2026 முதல் 09.09.2026

மாவட்ட அளவில் 

08.10.2026 முதல் 15.10.2026

மாநில அளவில் 

28.10.2026 (மதுரை மாவட்டம்)




1 மற்றும் 2 வகுப்புகள் போட்டிகள் தேதிகள் 

பள்ளிகள் அளவில் 

03.08.2026 முதல் 14.08.2026

குருவள மையம் அளவில் 

19.08.2026 முதல் 21.08.2026

வட்டார அளவில் 

01.09.2026 முதல் 09.09.2026

மாவட்ட அளவில் 

08.10.2026 முதல் 15.10.2026

மாநில அளவில் 

28.10.2026 (மதுரை மாவட்டம்)



எந்தெந்த வகுப்புகளுக்கு என்னென்ன போட்டிகள் என்று கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி முழுமையான விளக்கத்தை பெறவும் 

👇

CLICK HERE
































































































NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 57 - VII ஆம் வகுப்பு அறிவியல் (MERGED LESSONS)

 


NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 57 - VII  ஆம் வகுப்பு அறிவியல் (MERGED LESSONS)








மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 





ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 





இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 





இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 




தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)




தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 




தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 





இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 





இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 





இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 






இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 7 மணி அளவில் நடைபெறும் 





மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 





ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 





அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 





இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 





இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 




இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 



வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN



இன்று 2 தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

VII ஆம் வகுப்பு அறிவியல் 



தேர்வு 1

1. அன்றாட வாழ்வில் விலங்குகள் 

2. காட்சித் தொடர்பியல் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM





தேர்வு 2

1. செல் உயிரியல் 

2. கணினி காட்சித்தொடர்பு 

3. நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM




மாணவர்களின் கவனத்திற்கு 


மேற்கண்ட அனைத்து தேர்வுகளையும் நீங்கள் ஆங்கில வழியில் எழுதும் வழிமுறைகள் 


STEP 1

CLICK HERE TO WRITE ONLINE EXAM என்பதை CLICK செய்தவுடன் உங்களுக்கு தேர்வுக்கான GOOGLE FORM வினாத்தாள் OPEN ஆகும் 


STEP 2

வலது ஓரத்தில் மேலே தெரியும் மூன்று புள்ளிகளை CLICK செய்யவும் 


STEP 3

அதில் தோன்றும் மெனுவில் கீழே TRANSLATE என வரும் அதனை கிளிக் செய்யவும் 


STEP 4

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும். அவ்வாறு தெரியவில்லை எனில் அதில் தெரியும் மொழியில் ENGLISH என்பதை தேர்வு செய்யவும் 



STEP 5

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும் நீங்கள் தேர்வு எழுதலாம் 





நாளை  தேர்வுக்கான பாடப்பகுதிகள் 


7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் (MERGED LESSONS)


1. சுற்றுலா 

2. மாநில அரசுகள் 

3. முகலாய பேரரசு 

4. மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி 

5. ஊடகமும் ஜனநாயகமும் 



மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

9952329008

9361564416


த. நெல்சன் 

பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)

9500870040



உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும்  இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள் 



அன்புடன் 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 


வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பாடத்திட்டம் சார்ந்த ஒரு நாள் பயிற்சி



வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பாடத்திட்டம் சார்ந்த ஒரு நாள் பயிற்சி





இது குறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பள்ளிக்கல்வி இயக்ககம் மற்றும் தொடக்கக்கல்வி இயக்கக இயக்குநர்களின் இணை செயல்முறைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது 




பயிற்சி – 1 முதல் 3 ஆம் வகுப்புகள் வரை புதிய பாடத்திட்டம் மாற்றியமைத்து ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கபட்டது. எனவே பள்ளிகளின் வகுப்பறையினை உற்றுநோக்கல், பள்ளிப்பார்வை மற்றும் கண்காணிப்பு அலுவலராக உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பாடத்திட்டம் சார்ந்த ஒரு நாள் பயிற்சியினை இணையவழியில் அளிக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது 




இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.




இக்கல்வியாண்டில் 1 முதல் 3 முடிய உள்ள வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் மாற்றியமைத்து, மாணவர்கள் கல்வி கற்கும் வகையில் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, 1 முதல் 3 முடிய உள்ள வகுப்புகளை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டத்திற்கு, முதல் பருவத்திற்கான பயிற்சியானது மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.





தற்போது வட்டார அளவில் உள்ள பள்ளிகளின் வகுப்பறையினை உற்றுநோக்கல், பள்ளிப்பார்வை மற்றும் கண்காணிப்பு அலுவலராக உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு புதிய பாடத்திட்டம் சார்ந்த (1 முதல் 3 ஆம் வகுப்பு வரை) முதல் பருவத்திற்கான ஒரு நாள் பயிற்சியினை இணையவழியில் வழங்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி), வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் அனைவரும் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது 





மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள், அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுடன் இணைந்து பயிற்சி மையத்தினை தெரிவு செய்து, 23.07.2026 அன்று ஒரு நாள் பயிற்சி நடைபெறும் வகையில் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது 





இப்பயிற்சியின் மைய எண்ணிக்கைக்கேற்ப அந்தந்த மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி), மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் முதல்வர்கள், முதுநிலை விரிவுரையாளர்கள் பொறுப்பேற்று நடத்திடுமாறும், பயிற்சி முடிவுற்ற பின்னர் அறிக்கை விவரத்தினை பின்னர் இந்நிறுவனத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 





மேலும் இது பற்றிய விவரம் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 
👇

Thursday, 16 July 2026

PRASHAST 2.0 App பயன்படுத்தும் முறை மற்றும் பள்ளியில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களை கண்டறிவது தொடர்பான வீடியோக்கள் எவ்வாறு பார்ப்பது





மத்திய அரசின் வழிகாட்டுதல் படி நமது பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறியும் ஒரு செயல்முறையே PRASHAST (Pre-Assessment Holistic Screening Tool) ஆகும். 




இந்த செயலி NCERT மற்றும் இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு செயலி ஆகும். இதன் நோக்கம் மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் ஆரம்பக்கல்வியை பெறுவதில் எந்த விதமான தடையும் இருக்கக்கூடாது என்பதற்காகவும் அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காகவும் இந்த APP உருவாக்கப்பட்டுள்ளது 





2016 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின் படி (RPwD Act 2016) அங்கீகரிக்கப்பட்டுள்ள 21 வகையான குறைபாடுகளை (பேச்சு குறைபாடு, கற்றல் குறைபாடு, தசை குறைபாடு, பார்வை குறைபாடு) இதன் மூலம் கண்டறியமுடியும் 





ஆசிரியர்கள் இந்த APP பயன்படுத்தி மாணவர்களை கண்டறிந்து அடுத்த கட்ட சோதனைக்கு பிறகு மாணவர்களுக்கு மாற்று திறனாளி சான்றிதழ் கிடைக்க வழி வகை செய்கிறது 



 

இது இரு வகையில் (APP மற்றும் வலைத்தளம்) வழங்கப்பட்டுள்ளது 





கீழ்கண்ட விளக்கத்தின் அடிப்படையில் செயல்பட்டு இதில் கொடுக்கப்பட்டுள்ள 10 வீடியோக்களை அனைத்து வகை ஆசிரியர்களும் பார்வையிட வேண்டும்.





இதன் மூலம் 21 வகையான மாணவர்களின் குறைபாடுகளை கண்டறிய முடியும் 





கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் PRASHAST  வலைதளத்தில் நுழைந்த உடன் video tutorials என ஒரு option இருக்கும் அதை கிளிக் செய்த உடன் login with OTP என்ற ஒரு கட்டம் தோன்றும் அதில் பள்ளியின் udise code மற்றும் உங்கள் மொபைல் எண்ணை பதிவிடவேண்டும் 



அல்லது 



கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் PLAY STORE சென்று அதில் PRASHAST என்று டைப் செய்து அந்த அப்பை பதிவிறக்கம் செய்யவேண்டும் அதனுள் நுழைந்த உடன் video tutorials என ஒரு option இருக்கும் அதை கிளிக் செய்த உடன் login with OTP என்ற ஒரு கட்டம் தோன்றும் அதில் பள்ளியின் UDISE CODE  மற்றும் உங்கள் மொபைல் எண்ணை பதிவிடவேண்டும் 





உங்கள் எண்ணுக்கு ஒரு OTP வரும் அதனை மறுபடி நீங்கள் உள்ளீடு செய்தால் வீடியோ பார்க்கும் option வரும் அதில் உள்ள 10 வீடியோக்களையும் பார்க்க வேண்டும் அதன் பிறகே மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறியும் SCREENING பெற முடியும் 




அனைத்து ஆசிரியர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு screening செய்வதற்கு முன் PRASHAST 2.O app ல் கொடுக்கப்பட்ட 10 வீடியோக்களை முழுமையாக பார்த்தல் மட்டுமே தங்களுடைய ஐடி ல் screening பண்ணக் கூடிய மாணவர்கள் பெயர்கள் வரும். எனவே அனைத்து ஆசிரியர்களும் மேற்கண்ட video பார்க்க அறிவுறுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது





LAST DATE ஜூலை 31.7.26 





அனைத்து அரசு மற்றும் உதவி பெறும்  மேல் நிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளி பள்ளிகளில் உள்ள தலைமைஆசிரியர்கள்,பள்ளி ஆசிரியர்கள்,கால முறை ஊதியத்தில் இருக்கும் இசை, ஓவியம், தையல், விளையாட்டு ஆசிரியர்கள் அனைவருக்கும் இது பொருந்தும் 





ஆசிரியர்கள் இணையதளம் மற்றும் app பதிவிறக்கம் செய்து வீடியோ பார்க்கலாம் 




👉முக்கிய இணையதள முகவரி (Official Link)



Website Link 

👇

CLICK HERE



APP DOWNLOAD LINK

👇

CLICK HERE