Search This Blog

Thursday 16 February 2023

2021-2022 NMMS தேர்வில் வெற்றி பெற்ற தென்காசி மாவட்ட மாணவர்களுக்கு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் பாராட்டு விழா

தென்காசி மாவட்டத்தில் NMMS தேர்வில் வெற்றி பெற்ற 350க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு 16.02.2023 இன்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் உயர்திரு . துரை இரவிச்சந்திரன் இ.ஆ.ப தலைமையில் பாராட்டுவிழா நடந்தது 


இதற்கான ஏற்பாடுகளை தென்காசி வ.உ .சி வட்டார நூலகம் துறையினர் செய்திருந்தனர் 


தென்காசி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு.மு.கபீர் அவர்கள் NMMS  தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள் துணை நின்ற தலைமை ஆசிரியர்கள் ஆகியோரை வாழ்த்தி பேசினார்கள் 


தென்காசி மாவட்ட நூலக அலுவலர் 

திரு.லெ மீனாட்சி சுந்தரம் அவர்கள் 


தென்காசி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் 

திரு. ஆர்.ஆலோசியஸ் கிறிஸ்டோபர்  அவர்கள் 


தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் 

திருமதி. சா. ராஜேஸ்வரி அவர்கள் 


மாவட்டக்கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்)

திரு.ஆ. ராம சுப்பு அவர்கள் 


தென்காசி VTSR சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் 

திரு. ரஹ்மான் கான் அவர்கள் 


தென்காசி வ.உ .சி வட்டார நூலக வாசகர் வட்டம் தலைவர் 

திரு. எஸ்.கே. பாலசுப்பிரமணியன் அவர்கள் 

ஆகியோர் முன்னிலை வகித்தனர் 



தென்காசி வட்டார நூலகர் 

திரு.சூ.பிரம்ம நாயகம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள் 


தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் உயர் திரு.துரை இரவிச்சந்திரன் இ.ஆ.ப. அவர்கள் விழாப்பேருரை ஆற்றி NMMS தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், மாணவர்கள் பயின்ற பள்ளிக்கும் சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசுகள் வழங்கினார்கள் 


தென்காசி வட்டாரக்கல்வி அலுவலர் 

திரு.இளமுருகன் அவர்கள் 


வாசுதேவநல்லூர் வட்டாரக்கல்வி அலுவலர் 

திரு.மாரியப்பன் அவர்கள் 


தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி நிர்வாக இயக்குனர் 

திரு.ராம்குமார் 


தென்காசி இ. சி.ஈ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் 

திரு.செந்தூர்பாண்டியன் அவர்கள் 


தென்காசி மாவட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணித்தலைவர் 

திரு. ஆரோக்கிய ராசு 


தென்காசி மாவட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் 

திரு. செய்யது இப்ராஹிம் மூஸா அவர்கள் 


தென்காசி வட்டார நூலகம் வாசகர் வட்டம் பொருளாளர் 

திரு. சேகர் அவர்கள் 


தென்காசி வட்டார நூலகம் வாசகர் வட்டம் துணைத்தலைவர் 

திரு. முகைதீன் அவர்கள் 


தென்காசி வட்டார நூலகம் வாசகர் வட்டம் துணைத்தலைவர் 

திரு. கு.அருணாச்சலம் அவர்கள் 


தென்காசி வட்டார நூலகம் வாசகர் வட்டம் துணைத்தலைவர் 

திரு. மயிலேறும் பெருமாள் அவர்கள் 


தென்காசி வட்டார நூலகம் வாசகர் வட்டம் துணைத்தலைவர் 

திரு. பாரதிராஜா அவர்கள் 


தென்காசி மாவட்டம் SBI LIFE இன்ஸ்சுரன்ஸ் மேலாளர் 

திரு. ராமசுப்பிரமணியன் அவர்கள் 


ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் 


தென்காசி மாவட்டம் வட்டார நூலகம் நூலகர் 

திரு சுந்தர் அவர்கள் நன்றி உரை ஆற்றினார்கள் 



தென்காசி மாவட்டத்தில் 100-க்கும் அதிகமான பள்ளிகளை சார்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு பதக்கம் மற்றும் பாராட்டுச்சான்றிதழை பெற்றனர் 



தமிழகத்திலேயே NMMS தேர்வில் மாதிரி தேர்வுகளை தொடர்ந்து திறம்பட நடத்தி தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள் மற்றும் அதற்காக உழைத்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை மாவட்ட அளவில் அழைத்து பாராட்டியதற்கு காரணமான 

தென்காசி வ.உ .சி வட்டார நூலகர், தென்காசி வ.உ .சி வட்டார கிளை நூலகர், தென்காசி வ.உ .சி வட்டார நூலகம் வாசகர் வட்டம் பொறுப்பாளர்கள் ஆகியோரை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டிச்சென்றனர் 


































































No comments:

Post a Comment