Search This Blog

Wednesday 7 December 2022

"கலைத் திருவிழா போட்டிகள்" மாநில அளவிலான போட்டி தேதிகள் திடீர் மாற்றம்


6 முதல் 12 வகுப்புகளில் பயிலும்  மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் நடத்திட அறிவுறுத்தப்பட்டு 05.12.2022 வரை அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் வட்டார அளவில் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.


இதனை தொடர்ந்து பல மாவட்டங்களில் மாவட்ட அளவிலான போட்டிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.


11.11.2022 நாளிட்ட செயல்முறைகளின்படி மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் 03.01.2023 முதல் 09.01.2023க்குள் நடத்தி முடிக்க தெரிவிக்கப்பட்டது 


தற்போது நிர்வாக காரணங்களுக்காக மாநில அளவிலான போட்டிகள் 27.12.2022 முதல் 30.12.2022க்குள் நடத்தப்பட உள்ளது 


மாநில அளவிலான போட்டிகள் நடைபெறும் இடங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என மாநில திட்ட இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை  அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்












Tuesday 6 December 2022

எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான பயிற்சி கருத்தாளர்கள் மாநில அளவிலான பெயர் பட்டியல்

 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுந்தவர்களோ, தகுதியானவர்களோ அல்ல ஐகோர்ட் நீதிபதி கருத்து முழு விவரம்

 

தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுந்தவர்களோ, தகுதியானவர்களோ அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. 


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளியில், இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்த நித்யா என்பவர் ஆங்கில பாடப்பிரிவிற்கான பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 


இந்த வழக்கு விசாரணை நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் முன்பு நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழ் பாடப்பிரிவில் பி.எட் பாடப்பிரிவை முடித்த பிறகு, பி.ஏ. ஆங்கிலம் படித்ததாலும், தொலைதூர கல்வி முறையின் கீழ் படித்ததாலும் மனுதாரர் பதவி உயர்வுக்கு தகுதி பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.


இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தமிழ் பாடத்திற்கான இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு மனுதாரரை பரிசீலிக்கலாம் என உத்தரவிட்டார். 


மேலும் கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பல வழக்குகளில் தீர்பளித்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுந்தவர்களோ, தகுதியானவர்களோ அல்ல என்றும் தெரிவித்தார். 


இடஒதுக்கீட்டின் கீழ் நியமனம் மேற்கொள்வதாக இருந்தாலும் கூட தகுதியானவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என வலியுறுத்திய நீதிபதி, தற்போது ஆசிரியர்களாக உள்ள பெரும்பாலானோர் கல்லூரிக்கு சென்று படித்தவர்கள் இல்லை என்பது வேதனைக்குரியது என்று கூறினார்.


அகில இந்திய அளவில் கல்வியின் தரத்தில் தமிழகம் 27வது இடத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ள நீதிபதி, கல்விக்கு 36,895 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்  நிலையில், பெருந்தொகை ஆசிரியர்களின் ஊதியத்திற்கே செலவிடப்படுகிறது என்று குறிப்பிட்டார். 


நீதிமன்றத்தின் அழைப்பை ஏற்று நேரில் ஆஜரான தமிழக தொடக்க கல்வி இயக்குநர் தாக்கல் செய்த அறிக்கையில், கல்வி நிறுவனங்களில் நேரில் சென்று படித்தவர்களே ஆசிரியர்களாக நியமிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதையடுத்து, கல்லூரியில் படித்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் நடைமுறையை 3 மாதங்களில் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்

எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான பயிற்சி கருத்தாளர்களை விடுவிக்க உத்தரவு


எண்ணும் எழுத்தும் 

மாநில அளவிலான 

பயிற்சி


15..12.22

16.12.22

17.12.22


மாவட்ட அளவிலான 

பயிற்சி


19.12.22

20.12.22

21.12.22


ஒன்றிய அளவிலான 

பயிற்சி


02.01.23

03.01.23

04.01.23 




Sunday 4 December 2022

பள்ளிக் கல்வித்துறை - கலைத் திருவிழா (Kalai Thiruvizha) 2022 - 2023 - வட்டார அளவிலான, மாவட்ட அளவிலான பாராட்டு சான்றிதழ் மாதிரி

 

மாவட்ட அளவிலான சான்றிதழ்






வட்டார அளவு சான்றிதழ்



10 ஆம் வகுப்பு தமிழ் சரியான விடையை தேர்வு செய்தல் மாதிரி வினாத்தாள்


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

10 ஆம் வகுப்பு தமிழ் கடிதங்கள் PDF 13 மாதிரி கடிதங்கள் தயாரிப்பு அரசு உயர்நிலைப்பள்ளி தணிகைபோளூர்


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

பள்ளிக் கலைத்திருவிழா திருவட்டார் ஒன்றியம், கன்னியாகுமரி ஜண்டா மேளம்

 

👇👇

வீடியோ பார்க்க இதை அழுத்தவும்



நன்றி 

முத்தமிழ் ICT பாஸிஜி 


குறிப்பு 

உங்கள் பள்ளி மாணவர்களின் நிகழ்வை வலைத்தளத்தில் வெளியிட 

9952329008 நம்பருக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள் தெளிவான முகவரியுடன் 

பள்ளிக் கலைத்திருவிழா நாசிக் டோல் மேல்புறம் ஒன்றியம் கன்னியாகுமரி

 


👇👇

வீடியோ பார்க்க இதை அழுத்தவும்



நன்றி 
முத்தமிழ் ICT பாஸிஜி 



குறிப்பு 

உங்கள் பள்ளி மாணவர்களின் நிகழ்வை வலைத்தளத்தில் வெளியிட 

9952329008 நம்பருக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள் தெளிவான முகவரியுடன் 

பள்ளிக் கலைத்திருவிழா அ.ந.நி பள்ளி சுசீந்திரம், அகஸ்தீஸ்வரம் ஒன்றியம், கன்னியாகுமரி


👇👇

CLICK HERE TO WATCH


THANKS TO

முத்தமிழ் ICT பாஸிஜி 



குறிப்பு 

உங்கள் பள்ளி மாணவர்களின் நிகழ்வை வலைத்தளத்தில் வெளியிட 

9952329008 நம்பருக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்  தெளிவான முகவரியுடன் 

Wednesday 30 November 2022

சிறந்த பள்ளி விருது பட்டியல் வெளியீடு (2020-2021)

 சிறந்த பள்ளிகளுக்கான விருது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று பள்ளிகள் சிறந்த பள்ளியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.


சென்னையில் வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி விருது வழங்கும் விழா நடைபெற இருக்கிறது


அண்ணா நூற்றாண்டு நூலகம் கலையரங்கில் விழா நடைபெறுகிறது


பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர் ஒருவர், அந்த ஒன்றியத்தின் வட்டாரக் கல்வி அலுவலர் ஆகியோர் விழாவில் கலந்து கொள்ள வேண்டும்


சரியாக விழா அரங்கில் டிசம்பர் 3 ஆம் தேதி காலை 9 மணிக்கு இருக்க உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.


விருது பெறும் பள்ளி பட்டியல்











Tuesday 29 November 2022

மின் இணைப்பு ஆதார் எண் இணைப்பு முழு விவரம்


தமிழகத்தில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்ச குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. 


இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பை வெளியிட்டது.


இதனிடையே நுகர்வோர்களுக்கு இந்த இணைப்பு குறித்து எழும் சில கேள்விகளுக்கான பதில்களை இங்கு பார்க்கலாம்.


1. மின் இணைப்புடன் ஆதாரை எப்படி இணைப்பது?


ஆதாரை இணைக்க 

👇👇

இங்கே அழுத்தவும்  


மேலே  உள்ள லிங்க் மூலம்  மின்வாரிய இணையதள பக்கத்திற்கு சென்று உங்களின் மின் இணைப்பு பதிவை உள்ளிட்டு ஆதார் எண்ணை இணைக்கலாம் அல்லது மின் வாரிய அலுவலகத்துக்கு நீங்களே நேரில் சென்று ஆதார் எண்ணை இணைக்கலாம்.


2. இணையம் மூலம் எவ்வாறு ஆதார் எண்ணை இணைப்பது?


Step 1 : ஆதாரை இணைக்க 

👇👇

இங்கே அழுத்தவும்  


மேலே  உள்ள லிங்க் மூலம்  மின்வாரிய இணையதள பக்கத்திற்கு சென்று உங்கள் மின் இணைப்பு எண்ணை பதிவு செய்யவும்.


Step 2 : உங்கள் மின் இணைப்பில் இணைத்துள்ள மொபைல் எண்ணிற்கு ஒரு OTP வரும். அந்த OTPயை பதிவிட்ட பிறகு, உங்களின் ஆதார் கார்டையும், ஆதார் எண்ணையும் பதிவிட வேண்டும்.


Step 3 : நீங்கள் அந்த வீட்டிற்கு உரிமையாளரா அல்லது வாடகைக்கு குடியிருப்போரா அல்லது நீங்கள் அந்த வீட்டின் உரிமையாளர் ஆனால் மின் இணைப்பு வேறு ஒருவர் பெயரில் உள்ளதா என்ற ஆப்ஷன்களை தோன்றும். அதில் உங்களுக்கான விருப்பத்தை தேர்வு செய்து சப்மிட் செய்தால் போதும். உங்களின் ஆதார் எண்ணை மின் இணைப்போடு இணைத்துவிடலாம். இதையடுத்து ஒப்புகை ரசீது வரும். அதை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


3. நான் வாடகை வீட்டில் உள்ளேன். என் ஆதாரை நான் குடியிருக்கும் வீட்டின் மின் இணைப்போடு இணைக்க வேண்டுமா?

வீட்டின் உரிமையாளர் அனுமதி தந்தால் வாடகை வீட்டில் உள்ளவரே பதிவு செய்துகொள்ள முடியும்.


4. யாரெல்லாம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்?

வீடு, விசைத்தறி, விவசாயம் மற்றும் குடிசை வீட்டு மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.


5. வாடகைக்கு இருக்கும் நபரின் ஆதார் எண்ணை இணைத்தால், மின் இணைப்பு அவரது பெயருக்கு மாறிவிடுமா?

இல்லை. ஆதார் இணைப்பு என்பது ஒரு விவரம் மட்டுமே. வீட்டின் உரிமையாளர் மட்டுமே மின் இணைப்பின் பெயரில் மாற்றம் செய்ய முடியும்.


6. வாடகைதாரர் மாறும்பட்சத்தில் என்ன செய்ய வேண்டும்?

வாடகைதாரர் மாறும்போது, புதிதாக குடியிருக்க வருவோரின் ஆதாரை இணைக்கலாம்.


7. நான் 5 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளேன். ஒவ்வொரு வீட்டுக்கும் தனித் தனி மீட்டர்கள் உள்ளன. நான் எப்படி ஆதாரை இணைப்பது?

உங்கள் ஆதார் எண்ணையே அனைத்து இணைப்புகளுக்கும் வழங்க முடியும். அதனால், எந்தப் பாதிப்பும் இல்லை.


8. ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் என்னவாகும்?

ஆதாரை இணைக்க காலக்கெடு இல்லை; ஆனால் மானியம் பெறுபவர்கள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.


9. ஆதார் எண்ணை இணைத்தால்தான் நான் மின் கட்டணத்தை செலுத்த முடியுமா?

ஒரே நேரத்தில் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க அதிக நுகர்வோர் முயற்சித்ததால், சர்வர் முடங்கியது. இதையடுத்து, 2 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கி மின் வாரியம் உத்தரவிட்டது. மேலும், ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும், மின் வாரிய அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்தலாம். ஆனால், ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே, ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்த முடியும் என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது.


10. என் தாத்தா/அப்பா பெயரில் மின் இணைப்பு உள்ளது. ஆனால், அவர் இறந்துவிட்டார். நான் எப்படி ஆதாரை இணைப்பது?

மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்யாவிட்டாலும், யார் பெயரில் மாற்றம் செய்ய உள்ளீர்களோ அவரது பெயரில் உள்ள ஆதார் எண்ணை இணைக்கலாம். உங்களுடைய பெயரில் நீங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமானால், உங்களுடைய ஆதார் கார்டை பதிவேற்றம் செய்தால் போதும்.


11. ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுமா?

கட்டாயம் ரத்து செய்யப்படபடாது. அப்படி யாரும் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


12. ஆதாரை எவ்வளவு நாளில் இணைக்க வேண்டும்?

ஆதாரை இணைக்க காலக்கெடு எதுவும் இல்லை. ஆனால், கட்டாயம் இணைக்க வேண்டும்.


13. எங்களிடம் இணையதள வசதி இல்லை. நான் எப்படி இணைப்பது?

டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் எண்களை மின் இணைப்புடன் இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்களின் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கலாம்.