2026-27 ஆம் ஆண்டு அரசு பள்ளிகளில் மகிழ் முற்றம் செயல்பாடுகள் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்
மாணவர்களிடையே தலைமைத்துவம், குழுப்பணி, ஒழுக்கம், சமூகப் மனப்பான்மை, ஒற்றுமை, குழுச்செயல்பாடு மற்றும் முழுமையான ஆளுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்" திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2026-27 ஆம் கல்வியாண்டில், அனைத்து அரசு பள்ளிகளிலும் "மகிழ் முற்றம்" மாணவர் குழு செயல்பாடுகளை முறையாகவும், சிறப்பாகவும் செயல்படுத்திடும் நோக்கில், "மகிழ் முற்றம்" செயல்பாடுகளை மாணவர் பாராளுமன்ற செயல்பாடுகளுடன் ஒருங்கிணைத்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த செயல்பாடானது மாணவர்களை பள்ளி நிகழ்வுகளில் ஆர்வமுடன் ஈடுபடுத்தி, அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தி, ஒவ்வொரு மாணவருக்கும் சம வாய்ப்புகளை வழங்கி, அவர்களை திறமையான தலைவர்களாகவும், பொறுப்புள்ள குடிமக்களாகவும் உருவாக்க அடித்தளமாக அமையும்.
2026-2027 ஆம் ஆண்டிற்கான மகிழ் முற்றம் செயல்பாடுகளை பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாணவர் குழு ஒதுக்கீடு (House Allocation)
EMIS-இல் வடிவமைக்கப்பட்டுள்ள 'மகிழ் முற்றம்' (House System) பகுதியிலுள்ள Set House பொத்தானை கிளிக் செய்தவுடன் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து குழுக்களாக மாணவர்களுக்கு வகுப்பு மற்றும் பிரிவு வாரியாக குழு ஒதுக்கீடு செய்யப்படும். பின்னர், அங்கு கொடுக்கப்பட்டுள்ள House Allocation Excel-யினை கிளிக் செய்து ஆசிரியர்கள் பட்டியலை பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கான குழு ஒதுக்கீட்டினை தெரிவித்தல் வேண்டும். இதனை 30-06-2026-ற்குள் அனைத்து பள்ளிகளும் செய்திடல் வேண்டும்.
மாணவர் குழு அமைப்பின் வகுப்புத் தலைவர் :
(House Class Leader): ஒவ்வொரு வகுப்பிலும் மற்றும் வகுப்பிற்கான பிரிவிலும், ஒவ்வொரு குழுவிற்கான வகுப்புத் தலைவர் (House Class Leader) நியமிக்கப்படுதல் வேண்டும். இத்தேர்வானது, குழுவின் வகுப்புத் தலைவராக இருக்க விருப்பம் தெரிவிக்கும் மாணவ/மாணவியர்களின் பெயர்களை துண்டுச் சீட்டுகளாக எழுதி அம்மாணவர்களின் முன்னிலையில் குலுக்கல் முறையிலோ அல்லது கைதூக்கும் முறையிலோ 01-07-2026-ற்குள் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.(குறிப்பு: இரு பாலினர் பயிலும் பள்ளிகளில், ஒவ்வொரு வகுப்பிலும், மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில், குறைந்தது மூன்று குழுக்களுக்கான வகுப்பு தலைவர்கள் மாணவிகளாக இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்).
மேலும், ஒவ்வொரு மாதமும் ஐந்து குழுக்களுக்கான வகுப்புத் தலைவர்கள் மாற்றி அமைக்கப்படுதல் வேண்டும். ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது வேலைநாள் அன்று வகுப்புக்குழுத் தலைவர்கள் மாற்றி அமைக்கப்படுதல் வேண்டும்.
இதன்மூலம் வகுப்பறை அளவில் பெருமளவிலான மாணவர்கள் தலைமைத்துவ பண்பினை வளர்த்துக்கொள்ள நல்வாய்ப்பாக அமையும்.
மகிழ் முற்றம் ஆசிரியர் கூட்டமைப்பு
தலைமை ஆசிரியர்
மகிழ் முற்றம் மாணவர் குழு அமைப்பினை திட்டமிட்டு வழி நடத்துதல் வேண்டும்
5-ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொண்ட பள்ளிகள்
ஒரு ஆசிரியர் மகிழ் முற்றம் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக இருத்தல் வேண்டும் (HSTC-HOUSE SYSTEM TEACHER COORDINATOR)
மற்ற ஆசிரியர்களுக்கான குழு குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும்
ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு பொறுப்பு ஆசிரியர் நியமிக்கப்படுத்தல் வேண்டும் (HOUSE HEAD TEACHER)
5-ற்கும் குறைவான ஆசிரியர்கள் கொண்ட பள்ளிகள்
ஒரு ஆசிரியர் மகிழ் முற்றம் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக இருக்க வேண்டும்
மற்ற ஆசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்களுக்கு பொறுப்பு ஆசிரியராக குலுக்கல் முறையில் நியமிக்கப்படுத்தல் வேண்டும்
தலைமை ஆசிரியர் மட்டும் உள்ள பள்ளிகள்
மகிழ் முற்றம் மாணவர் குழு அமைப்பின் அனைத்து செயல்பாடுகளையும் தலைமை ஆசிரியர் மேற்கொள்ளுதல் வேண்டும்
01.07.2026-ற்குள் மகிழ் முற்றம் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் குழு பொறுப்பாசிரியர் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும்
மாணவர் குழுத்தலைவர்கள் மற்றும் மாணவ அமைச்சர்கள் தேர்வு
மேல்நிலைப்பள்ளி
11 ஆம் வகுப்பு மாணவர்களை தேர்வு செய்தல் வேண்டும்
உயர்நிலைப்பள்ளி
9 ஆம் வகுப்பு மாணவர்களை தேர்வு செய்தல் வேண்டும்
நடுநிலைப்பள்ளி
8 ஆம் வகுப்பு மாணவர்களை தேர்வு செய்தல் வேண்டும்
தொடக்கப்பள்ளி
5 ஆம் வகுப்பு மாணவர்களை தேர்வு செய்தல் வேண்டும்
மேலே குறிப்பிட்ட படி ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு மாணவர் குழுத்தலைவர் மற்றும் ஒரு மாணவ அமைச்சர் நியமிக்கப்படுதல் வேண்டும்
மேலும் இந்த ஆணை பற்றிய தகவல் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறை PDF பதிவிறக்கம் செய்யவும்
👇