அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" - ஓராண்டிற்கு சுமார் ₹756 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு
தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" - நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு - வழங்கப்பட்டது - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன
அரசு சுகாதார சேவைகள் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு தாயின் பயணத்தை கௌரவிக்கும் வகையில் "ஒரு கிராம் தங்க மோதிரம்" வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
இத்திட்டம் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" என அழைக்கப்படும்.
தமிழ் மரபில் உள்ள 'தாய்மாமன் சீர்' என்ற கலாச்சாரத்தின் அடிப்படையில், அரசு நிறுவனங்களில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசே தாய்மாமனாக இருந்து இந்த தங்க மோதிரத்தை வரவேற்புப் பரிசாக வழங்கும்.
திட்டத்தின் வழிமுறைகள் மற்றும் தகுதிகள்:
தகுதிகள்: பயனாளிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் அனைத்து தாய்மார்களுக்கும் இது பொருந்தும்.
தாய்மார்கள் PICME-ல் பதிவு செய்து RCH ID பெற்றிருக்க வேண்டும்.
குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, இருப்பிடச் சான்றிதழ் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை முகவரிச் சான்றாக சமர்ப்பிக்க வேண்டும்.
குழந்தையின் பாலினம் மற்றும் எத்தனையாவது குழந்தை என்ற பாகுபாடின்றி அனைத்து பச்சிளம் குழந்தைகளுக்கும் இத்திட்டம் பொருந்தும்.
No comments:
Post a Comment