Search This Blog
Friday 2 December 2022
Wednesday 30 November 2022
சிறந்த பள்ளி விருது பட்டியல் வெளியீடு (2020-2021)
சிறந்த பள்ளிகளுக்கான விருது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று பள்ளிகள் சிறந்த பள்ளியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி விருது வழங்கும் விழா நடைபெற இருக்கிறது
அண்ணா நூற்றாண்டு நூலகம் கலையரங்கில் விழா நடைபெறுகிறது
பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர் ஒருவர், அந்த ஒன்றியத்தின் வட்டாரக் கல்வி அலுவலர் ஆகியோர் விழாவில் கலந்து கொள்ள வேண்டும்
சரியாக விழா அரங்கில் டிசம்பர் 3 ஆம் தேதி காலை 9 மணிக்கு இருக்க உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
விருது பெறும் பள்ளி பட்டியல்
Tuesday 29 November 2022
மின் இணைப்பு ஆதார் எண் இணைப்பு முழு விவரம்
தமிழகத்தில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்ச குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன.
இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பை வெளியிட்டது.
இதனிடையே நுகர்வோர்களுக்கு இந்த இணைப்பு குறித்து எழும் சில கேள்விகளுக்கான பதில்களை இங்கு பார்க்கலாம்.
1. மின் இணைப்புடன் ஆதாரை எப்படி இணைப்பது?
ஆதாரை இணைக்க
👇👇
மேலே உள்ள லிங்க் மூலம் மின்வாரிய இணையதள பக்கத்திற்கு சென்று உங்களின் மின் இணைப்பு பதிவை உள்ளிட்டு ஆதார் எண்ணை இணைக்கலாம் அல்லது மின் வாரிய அலுவலகத்துக்கு நீங்களே நேரில் சென்று ஆதார் எண்ணை இணைக்கலாம்.
2. இணையம் மூலம் எவ்வாறு ஆதார் எண்ணை இணைப்பது?
Step 1 : ஆதாரை இணைக்க
👇👇
மேலே உள்ள லிங்க் மூலம் மின்வாரிய இணையதள பக்கத்திற்கு சென்று உங்கள் மின் இணைப்பு எண்ணை பதிவு செய்யவும்.
Step 2 : உங்கள் மின் இணைப்பில் இணைத்துள்ள மொபைல் எண்ணிற்கு ஒரு OTP வரும். அந்த OTPயை பதிவிட்ட பிறகு, உங்களின் ஆதார் கார்டையும், ஆதார் எண்ணையும் பதிவிட வேண்டும்.
Step 3 : நீங்கள் அந்த வீட்டிற்கு உரிமையாளரா அல்லது வாடகைக்கு குடியிருப்போரா அல்லது நீங்கள் அந்த வீட்டின் உரிமையாளர் ஆனால் மின் இணைப்பு வேறு ஒருவர் பெயரில் உள்ளதா என்ற ஆப்ஷன்களை தோன்றும். அதில் உங்களுக்கான விருப்பத்தை தேர்வு செய்து சப்மிட் செய்தால் போதும். உங்களின் ஆதார் எண்ணை மின் இணைப்போடு இணைத்துவிடலாம். இதையடுத்து ஒப்புகை ரசீது வரும். அதை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
3. நான் வாடகை வீட்டில் உள்ளேன். என் ஆதாரை நான் குடியிருக்கும் வீட்டின் மின் இணைப்போடு இணைக்க வேண்டுமா?
வீட்டின் உரிமையாளர் அனுமதி தந்தால் வாடகை வீட்டில் உள்ளவரே பதிவு செய்துகொள்ள முடியும்.
4. யாரெல்லாம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்?
வீடு, விசைத்தறி, விவசாயம் மற்றும் குடிசை வீட்டு மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
5. வாடகைக்கு இருக்கும் நபரின் ஆதார் எண்ணை இணைத்தால், மின் இணைப்பு அவரது பெயருக்கு மாறிவிடுமா?
இல்லை. ஆதார் இணைப்பு என்பது ஒரு விவரம் மட்டுமே. வீட்டின் உரிமையாளர் மட்டுமே மின் இணைப்பின் பெயரில் மாற்றம் செய்ய முடியும்.
6. வாடகைதாரர் மாறும்பட்சத்தில் என்ன செய்ய வேண்டும்?
வாடகைதாரர் மாறும்போது, புதிதாக குடியிருக்க வருவோரின் ஆதாரை இணைக்கலாம்.
7. நான் 5 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளேன். ஒவ்வொரு வீட்டுக்கும் தனித் தனி மீட்டர்கள் உள்ளன. நான் எப்படி ஆதாரை இணைப்பது?
உங்கள் ஆதார் எண்ணையே அனைத்து இணைப்புகளுக்கும் வழங்க முடியும். அதனால், எந்தப் பாதிப்பும் இல்லை.
8. ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் என்னவாகும்?
ஆதாரை இணைக்க காலக்கெடு இல்லை; ஆனால் மானியம் பெறுபவர்கள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
9. ஆதார் எண்ணை இணைத்தால்தான் நான் மின் கட்டணத்தை செலுத்த முடியுமா?
ஒரே நேரத்தில் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க அதிக நுகர்வோர் முயற்சித்ததால், சர்வர் முடங்கியது. இதையடுத்து, 2 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கி மின் வாரியம் உத்தரவிட்டது. மேலும், ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும், மின் வாரிய அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்தலாம். ஆனால், ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே, ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்த முடியும் என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது.
10. என் தாத்தா/அப்பா பெயரில் மின் இணைப்பு உள்ளது. ஆனால், அவர் இறந்துவிட்டார். நான் எப்படி ஆதாரை இணைப்பது?
மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்யாவிட்டாலும், யார் பெயரில் மாற்றம் செய்ய உள்ளீர்களோ அவரது பெயரில் உள்ள ஆதார் எண்ணை இணைக்கலாம். உங்களுடைய பெயரில் நீங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமானால், உங்களுடைய ஆதார் கார்டை பதிவேற்றம் செய்தால் போதும்.
11. ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுமா?
கட்டாயம் ரத்து செய்யப்படபடாது. அப்படி யாரும் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
12. ஆதாரை எவ்வளவு நாளில் இணைக்க வேண்டும்?
ஆதாரை இணைக்க காலக்கெடு எதுவும் இல்லை. ஆனால், கட்டாயம் இணைக்க வேண்டும்.
13. எங்களிடம் இணையதள வசதி இல்லை. நான் எப்படி இணைப்பது?
டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் எண்களை மின் இணைப்புடன் இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்களின் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கலாம்.
Monday 28 November 2022
Sunday 27 November 2022
Saturday 26 November 2022
"வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு
அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 8 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை "வானவில் மன்றம்" தொடங்க உத்தரவு பிறப்பித்துள்ளது
தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவை தொடர்ந்து இந்த மன்றம் அனைத்து பள்ளிகளிலும் 28.11.2022 அன்று 2.00 மணி அளவில் தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது
அறிவியல் பாடங்கள் எப்போதுமே செய்முறையுடன் கற்றுக்கொள்வது மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செயல் ஆகும்
மாணவர்களே அறிவியல் கருத்துகளை செய்து பார்த்து கற்றுக்கொள்வது அவர்களின் திறனை மேலும் மெருகேற்றும்
அறிவியல் மற்றும் கணக்கு பாடங்களுக்கான செய்முறை வீடியோக்கள் பள்ளிக்கல்வித்துறை மூலம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது
அறிவியல் பாடத்தில் இயற்பியல், வேதியியல், உயிரியல் என தனித்தனியாக வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது
கணக்கு பாடத்திலும் தேவைப்படும் வீடியோக்கள் முதற்கட்டமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
அனைத்து ஆசிரியர்களும் பாடங்களுக்கு ஏற்ப தேவைப்படும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு காண்பிக்கலாம்
மிக ரசனையாக தெளிவாக ஒவ்வொரு சோதனையும் விளக்கப்பட்டுள்ளது
மாணவர்களைக்கொண்டும் பல சோதனைகள் செய்து விளக்கப்பட்டுள்ளது
இயற்பியல் வீடியோக்கள்
👇👇
வேதியியல் வீடியோக்கள்
👇👇
கணக்கு வீடியோக்கள்
👇👇
உயிரியல்
👇👇
VIII SCIENCE MOVEMENTS IN ANIMALS FULL LESSON POWER POINT. SMART வகுப்பு எடுப்பதற்கு உதவும்
👉 முழு பாடமும் PPT - PDF ஆக உள்ளது
👉 ஆசிரியர்கள் ஸ்மார்ட் வகுப்பு எடுப்பதற்கு வசதியாக இருக்கும்
👉 மாணவர்களுக்கு எளிதில் புரியும் விதத்தில் உள்ளது
👉 NMMS, NTSE படிக்கும் மாணவர்களுக்கு எளிதாக படிக்க முடியும்
👇👇
குறிப்பு:
ஆசிரியர்கள் இது போல் பவர் பாயிண்ட் உருவாக்கி இருந்தால் நமது ramanibabu.blogspot.com வலை தளத்தில் வெளியிட கீழ்கண்ட எண்ணுக்கு அனுப்புங்கள்
👇👇
👉 9952329008
Follow this link to join
ramanibabu.blogspot.com WhatsApp group
👇👇
Friday 25 November 2022
அரசு பள்ளிகளில் "வானவில் மன்றம்" தொடங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள்
👉 அரசு பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தும் முயற்சி
👉 அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தொடங்கப்பட வேண்டும்
👉 28.11.2022 பிற்பகல் 2 மணிக்கு "வானவில் மன்றம்" துவங்கப்பட வேண்டும்
👉 வானவில் மன்றத்தின் தொடக்கமாக ஒருசில எளிய பரிசோதனை செய்து காட்டலாம்
👉 துவக்கத்தின் அடையாளமாக வண்ண பலூன்கள் பறக்க விடலாம்
👉 முதற்கட்டமாக ஒரு பள்ளிக்கு ரூபாய் 1200 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
👉 ஆசிரியர்கள் தானே சோதனை செய்து காட்டி மாணவர்கள் சோதனை செய்ய ஆர்வமூட்ட வேண்டும்
இது பற்றிய விவரங்களுக்கு
கீழே உள்ள link மூலம் பதிவிறக்கம்
செய்யவும்
👇👇
Follow this link to join
ramanibabu.blogspot.com WhatsApp group
👇👇
போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் பிரமாண்ட நடனம் தடகள போட்டி தொடக்க விழாவில் அசத்திய மாணவிகள்
திருவண்ணாமலை மாவட்டம் தடகள போட்டிகள் தொடக்க விழாவில் போளூர் அரசு பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு நடத்திய பிரமாண்ட நடனம்.
விழாவில் கலந்து கொண்ட அனைத்து பிரமுகர்களும் மாணவிகளின் பிரமாண்ட நடனத்தை பாராட்டினார்
இது போல் அதிக எண்ணிக்கையில் மாணவிகளை கலந்து செய்து மிக பெரிய அளவில் நடன பயிற்சியை அமைத்து பெரும் சாதனையை படைத்துள்ளது போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
இதற்காக உழைத்த தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பங்கு பெற்ற மாணவிகள் அனைவரையும் விழாவில் கலந்து கொண்டவர்கள் பாராட்டினார்கள்
Follow this link to join
ramanibabu.blogspot.com WhatsApp group
👇👇