டெட் (TET - ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்வை கட்டாயமாக்கிய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன.
சுமார் 2 மணி நேரம் காரசாரமான விவாதம் நடைபெற்றது.
ஆசிரியர்கள் தரப்பில் வாதிட முகுல் ரோத்தகி, அபிஷேக் மனு சிங்வி போன்ற மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.
அனைத்து வழக்கறிஞர்களும் RTE (கல்வி உரிமைச் சட்டம்), 2017-ஆம் ஆண்டு RTE திருத்தம், NCTE வழிகாட்டுதல்கள் மற்றும் 2012-இல் திருத்தப்பட்ட NCTE வழிகாட்டுதல்களை விரிவாக மேற்கோள் காட்டினர்.
2010-ஆம் ஆண்டுக்கு முன் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு TET-ஐக் கட்டாயமாக்குவது நியாயமற்றது என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மாண்புமிகு நீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டுள்ளது.
மேற்கு வங்க அரசு TET தேர்வை நடத்துவதற்கான கால அவகாசத்தை 2 ஆண்டுகளில் இருந்து 4 ஆண்டுகளாக உயர்த்தக் கோரியுள்ளது.
AIPTF குழுவும் வழக்கறிஞர்களும் விசாரணையின் போது ஆசிரியர்களின் தரப்பை வலுவாக முன்வைத்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் மூலம் நாட்டின் 25 லட்சம் ஆசிரியர்களுக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதி நிலைப்பாடு:- சரியான புள்ளி விவரங்களைத் தாக்கல் செய்ய மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. அடுத்த விசாரணை ஜீன் மாதம் மூன்றாவது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தகவல் வழங்கியவர்கள்:
வினோத் தாக்ரான் (நிர்வாகப் பொதுச் செயலாளர், AIPTF)
சீமா மாத்தூர் (நிர்வாகத் தலைவர், AIPTF)
நிஷா தஹியா (பொதுச் செயலாளர்)
தீபக் பந்த் (துணைப் பொதுச் செயலாளர்)
அகில டெல்லி தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கம் (All Delhi Primary Teachers Association)
No comments:
Post a Comment