Pages

Friday 1 April 2022

சிலப்பதிகாரம்


சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் காப்பியத் தலைவன் கோவலன்.

 

* சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் காப்பியத் தலைவி கண்ணகி.

 

* சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் கணிகை குலப்பெண் மாதவி.

 

* கோவலனின் தந்தை பெயர் மாசாத்துவான்.

 

* கண்ணகியின் தந்தை பெயர் மாநாய்கன்.

 

* கண்ணகியின் தோழியின் பெயர் சித்திராபதி.

 

* மாதவியின் தோழியின் பெயர் வயந்த மாலை.

 

* சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் பாண்டிய மன்னனின் பெயர் நெடுஞ்செழியன்.

 

* நெடுஞ்செழியனின் மனைவியின் பெயர் கோப்பெருந்தேவி.

 

* சிலப்பதிகாரத்தில் நடைபெறும் விழா பெயர் இந்திர விழா.

 

* இந்திர விழாவில் மாதவி பாடிய பாடல் பெயர் கானல் வரி.


சிலப்பதிகாரத்தில் வரும் சமணத் துறவியின் பெயர் கவுந்தி அடிகள்.

 

* சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்.

 

* இளங்கோவடிகளின் தந்தையின் பெயர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.

 

* இளங்கோவடிகளின் தாயின் பெயர் நற்சோணை.

 

* இளங்கோவடிகளின் தமையன் பெயர் சேரன் செங்குட்டவன்.

 

* இளங்கோவடிகள் இளமையிலே துறவு பூண்டு தங்கிய இடம் குணவாயிற் கோட்டம்.

 

* சிலப்பதிகாரத்தில் திருமால் புகழ்பாடும் பகுதியின் பெயர் ஆய்ச்சியர் குரவை.

 

* சிலப்பதிகாரத்தில் முருகன் புகழ்பாடும் பகுதியின் பெயர் குன்றக் குரவை.

 

* சிலப்பதிகாரத்தில் கொற்றவை புகழ்பாடும் பகுதியின் பெயர் வேட்டுவவரி.

 

* சிலப்பதிகாரத்தின் பெரும்பகுதி (காண்டம்) எண்ணிக்கை 3.

 

* சிலப்பதிகாரத்தின் சிறு பிரிவு (காதை) எண்ணிக்கை 30.


* சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இடங்களின் பெயர்கள் மற்றும் காதைகள்

1. புகார் காண்டம் – 10 காதைகள்.

2. மதுரை காண்டம் – 13 காதைகள்.

3. வஞ்சிக் காண்டம் – 7 காதைகள்.


 

* புகார் காண்டம் – 10

   முதல் காதை (மங்கல வாழ்த்துப் பாடல்)

  கடைசி காதை (நாடுகாண் காதை)


 

* மதுரை காண்டம் – 13

முதல் காதை (காடுகாண் காதை)

கடைசி காதை (கட்டுரை காதை)


 

* வஞ்சிக் காண்டம் – 7

முதல் காதை (குன்றக் குரவை)

கடைசி காதை (வரந்தரு காதை)


 

* புகார் காண்டம் எந்த நாட்டைப் பற்றிக் கூறுகிறது சோழர் நாட்டை.

 

* மதுரை காண்டம் எந்த நாட்டைப் பற்றிக் கூறுகிறது பாண்டியன் நாட்டை.

 

* வஞ்சி காண்டம் எந்த நாட்டைப் பற்றிக் கூறுகிறது சேர நாட்டை.

 

* சிலப்பதிகாரத்தில் உள்ள மொத்த வரிகளின் எண்ணிக்கை 5001.

 

* சிலப்பதிகார நூலின் சமயம் சமண சமயம்.

 

* சிலப்பதிகாரம் நூலின் காலம் கிபி இரண்டாம் நூற்றாண்டு.

 

* சிலப்பதிகாரம் பிரித்து எழுதுக

  சிலம்பு + அதிகாரம்.


 

* சிலப்பதிகாரம் பெயர் அமையக் காரணம் சிலம்பின் ஆல் இணைந்த கதையை கூறுவதால் சிலப்பதிகாரம் எனப் பெயர் பெற்றது.

 

* சீத்தலைச் சாத்தனார் இளங்கோவடிகள் இடம் கூறிய வரிகள் அடிகள் நீரே அருளுக.


 

* சிலப்பதிகாரத்தின் மையக் கருத்துக்கள்

1. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.

2. உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.

3. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்.


 

* சிலப்பதிகாரத்தை எழுதிய உரை ஆசிரியர்கள் 

1. அரும்பத உரைகாரர்.

2. அடியார்க்கு நல்லார்.

3. நா. மு. வேங்கடசாமி நாட்டார்.

 

* சிலப்பதிகாரத்தில் தலைக்கோல் பட்டம் வென்றவர் யார் மாதவி.

 

* சிலப்பதிகாரத்தில் வரும் இலங்கை மன்னனின் பெயர் கடலாகு.

 

* மாதவி கோவலன் நெய் விட்டு பிரியும்போது கடிதம் யாரிடம் கொடுத்து அனுப்புவாள் வசந்தமாலை மாங்காட்டு மறையோன்.

 

* மாதவி கடிதம் கொடுத்ததை கடித இலக்கியத்தின் முன்னோடியாக திகழ்கிறது.




* சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள்

* நாடக காப்பியம்

* உரை இடப்பட்ட பாட்டுடைச் செய்யுள்

* முத்தமிழ் காப்பியம்

* குடிமக்கள் காப்பியம்

* முதற் காப்பியம்

* ஒற்றுமைக் காப்பியம்

* மூவேந்தர் காப்பியம்

* தமிழின் தேசிய காப்பியம்

* புரட்சிக் காப்பியம்.

 

* இளங்கோவடிகள் ஒரு அரசியல் வேறுபாடு கருதாதவர், சமய வேறுபாடற்ற துறவி.

 

* இளங்கோவடிகள் பற்றிய பாரதியார் எவ்வாறு புகழ்கிறார்

“யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை என்பது உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை”.

 

* சிலப்பதிகாரத்தைப் பற்றி பாரதியார் எவ்வாறு புகழ்கிறார்

” நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு”

 

* சிலப்பதிகாரமும் ,மணிமேகலையும் இரட்டை காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன.

 

* இரட்டை காப்பியங்கள் என அழைக்கப்பட காரணம் காலத் தொடர்பு, கதை தொடர்பு, பாவகை தொடர்பு ஆகியவை இருப்பதால் இரட்டை காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன.

 

* சிலப்பதிகாரத்தின் கதை உருவம் எவ்வகை இசை நாடகம் போல் ஆனது.


* சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் வேங்கை மரத்தின் கீழ் ஒரு பெண் தெய்வத்தை பார்த்தோம் என்று கூறியவர்கள் சேரன் செங்குட்டுவன், சீத்தலைச் சாத்தனார், இளங்கோவடிகள்.

 

* வேங்கை மரத்தின் கீழ் யாரைப் பார்த்தார்கள் கண்ணகியை பார்த்தார்கள்.

 

* தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தீரும் சிலப்பதிகாரம் எனக் கூறியவர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

No comments:

Post a Comment